முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பிரமுகர் 5 பேர் நீக்கம்: முதல்வர் அறிவிப்பு

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை மார்ச்.22 - கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி நகரத்தைச்சேர்ந்த 5 அ.தி.மு.க. பிரமுகர்களை கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக்கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவாரூர் மாவட்டத்தைச்சேர்ந்த கா.பிச்சைக்கண்ணு, (மன்னார்குடி ஒன்றியக்கழக அவைத்தலைவர்), ஆர்.ராஜகோபால், (மன்னார்குடி நகர ஜெயலலிதா பேரவைத்தலைவர்), ஜி.சதாசிவம், (மன்னார்குடி நகர எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர்), டி.என்.பாஸ்கரன் (மன்னார்குடி நகர எம்.ஜி.ஆர் இளைஞர் அணி முன்னாள் செயலாளர்), ப.மணிவண்ணன் (மன்னார்குடி நகர மன்ற முன்னாள் உறுப்பினர்).

ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன் பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்