முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் ராணுவ தளபதியை மன்மோகன்சிங் தொடர்பு கொள்ளவில்லை

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஏப்.- 25 - மொகாலியில் இரு நாட்டு பிரதமர்கள் சந்தித்து பேசியதற்கு முன்பு பாகிஸ்தான் ராணுவ தளபதி அஸ்தக் பர்வேஷ் கயாமியை  மன்மோகன் சிங் தொடர்பு கொண்டு பேசவில்லை என்று இந்திய பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மொகாலியில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஜா கிலானியும்,  இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்தித்து பேசினார்கள். இந்த  சந்திப்புக்கு முன்னதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி அஸ்தக் பர்வேஷ் கயாமியுடன்  மன்மோகன் சிங் தொடர்பு கொண்டு பேசியதாக பிரிட்டிஷ் செய்தித்தாள் ஒன்று  செய்தி வெளியிட்டு இருந்ததாக இந்திய பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.
இந்த ஊடகச்செய்திகள் தவறானவை  என்று  இந்திய பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த செய்திகள் பொய்யானவை என்றும்  அந்த அலுவலகம் கூறியுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்