முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரபாபு நாயுடுவை மிரட்டும் காங்கிரஸ்: நடிகை ரோஜா

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013      சினிமா
Image Unavailable

 

ஐதராபாத், மார்ச். 23 ​ காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் போது என்ன தவறு செய்தாலும் தப்பித்து விடலாம். ஆனால் காங்கிரஸை விட்டு விலகினால் அவர்கள் மீது சி.பி.ஐ நடவடிக்கை பாயும் என்று நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான ரோஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் போது என்ன தவறு செய்தாலும் தப்பித்து விடலாம். ஆனால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினால் அவர்கள் மீது சி.பி.ஐ நடவடிக்கை பாயும் என்பது மு.க. ஸ்டாலின் வீட்டில் நடந்த சோதனை மூலம் தெளிவாகியுள்ளது. சோதனை நடத்தியது தவறு என்று சிதம்பரம் கூறயுள்ளார். 

ஸ்டாலின் நிரபராதி என்றால் அவர் வீட்டில் ஏன் சோதனை நடத்த வேண்டும்? கூட்டணியில் இருந்து விலகியதால் அவர் குற்றவாளி ஆகி விட்டாரா? சந்திரபாபு நாயுடுவை காங்கிரஸ் சி.பி.ஐ. யை வைத்து மிரட்டி வருகிறது. அதனால் தான் அவர் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளார். சி.பி.ஐ. யின் நாடகம் அனைவருக்கும் தெரிந்து விட்டது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்