முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபக்சேவுக்கு எதிராக போபாலில் கண்டன ஆர்ப்பாட்டம்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

போபால், மார்ச். 23 - ராஜபக்சேவுக்கு எதிராகவும், அவரைத் தண்டிக்க வேண்டும் என்று கோரியும் தமிழகத்தைத் தாண்டி இந்தியாவின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயமும் தமிழ் ்ஈழம் வேண்டியும், ராஜபக்சேவைத் தண்டிக்கக் கோரியும் மாபெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், ரயில் மறியல், உண்ணாவிரதம் என போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

இந்த நிலையில் மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் பெரும் திரளான தமிழர்கள் திரண்டு ராஜபக்சேவை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். அமைதியான முறையில் அவர்கள் ராஜபக்சேவின் இனவெறிப் படுகொலைகளை எதிர்த்துக் கோஷமிட்டனர். ராஜபக்சே நிகழ்த்திய இனவெறிப் படுகொலைகளை சித்தரிக்கும் போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை ஏந்தியபடி அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்