முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை: பிரதமருக்கு கடிதம்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச்.23 - சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையை தன்னாட்சி பெற்ற தேசிய புற்று நோய் ஆராய்ச்சி சிறப்பு மையமாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

12-வது ஆண்டு திட்டத்தில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை தன்னாட்சி பெற்ற தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி சிறப்பு மையமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை மத்திய அரசு நிலுவையில் இருப்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இந்த கோரிக்கை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் நிலுவையில் உள்ளது. சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை 1954ம் ஆண்டு தன்னார்வ அறக்கட்டளையாக புகழ்பெற்ற மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் உருவாக்கப்பட்டது.

இது அரசு சாராத மையமாகும். தமிழக அரசு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பு மானியத்தை அளித்து வருகிறது. அகில இந்தியாவையும் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக இம்மருத்துவமனைக்கு வருகிறார்கள். மத்திய அரசு இந்த மையத்துக்கு மிகக் குறைந்த அளவே நிதி உதவி அளித்துள்ளது. புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற நோய்களை தடுப்பதற்காக சாதனங்களை வாங்குவதற்கு ரூ.4.80 கோடியை வழங்கியுள்ளது. மாநில அரசு அதன் பங்காக ரூ.1.20 கோடியை வழங்கி உள்ளது. இந்த மையம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றி உள்ள சிறப்பான சேவையை கருத்தில் கொண்டு இதனை தன்னாட்சி பெற்ற தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி சிறப்பு மையமாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

இது தொடர்பாக அந்த மருத்துவமனையின் தலைவர் இதனை தரம் உயர்த்தக் கோரி அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் நிலுவையில் உள்ளது. 

மேலும் ஏராளமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இதனை தேசிய மையமாக தரம் உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மிகச்சிறந்த மருத்துவ மையம் என்று புகழ்பெற்ற உலக சுகாதார நிறுவனத்தால் பாராட்டப்பெற்ற  நாட்டில் உள்ள பழமையான அரசு சாராத அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை சிறப்பு மையமாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதற்கு தங்களது பதிலை எதிர்பார்க்கிறேன். 

இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்