முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலிய வீரர்களை விசாரிக்க பிரதமருக்கு உம்மன்சாண்டி கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், மார்ச். - 25 - 2 இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 இத்தாலிய பாதுகாவலர்களை விசாரிப்பதற்கு கேரள மாநிலம் கொல்லத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடிதம் எழுதி உள்ளார். பிரதமருக்கு இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  2 இத்தாலிய பாதுகாவலர்களை விசாரிப்பதற்கு கொல்லத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். இதற்காக கொல்லத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட் சிறப்பு நீதிமன்றமாக மாற்றியமைக்கப்படும். விசாரணையை துரிதப்படுத்துவதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். மேலும் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும், வெளியுறவு அமைச்சருக்கும் தனித்தனியே அவர் ஒரு செய்தி அனுப்பி உள்ளார். அதில் சுப்ரீம் கோர்ட் பரிந்துரைத்தபடி கேரளாவில் சிறப்பு நீதிமன்றம் அமைக்க அவர் வலியுறுத்தி உள்ளார்.  இதற்காக கொல்லம் நீதிமன்றத்தை அவர் பரிந்துரை செய்துள்ளார். கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த 2 இந்திய மீனவர்களை இத்தாலிய பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றது தெரிந்ததே. பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக தாய்நாடு சென்று திரும்பிய இவர்கள் மீண்டும் தேர்தலில் பங்கேற்பதற்காக தங்கள் நாட்டுக்கு சென்றனர். ஆனால் இவர்களை திருப்பி அனுப்ப இத்தாலிய அரசு மறுத்தது. பின்னர் இந்தியாவின் கடும் கண்டனத்திற்கு பிறகு அந்த 2 பாதுகாவலர்களும் தற்போது இந்தியாவிற்கு திரும்பி விட்டனர். இவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட மாட்டாது என்று இந்திய தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்ட பிறகே இவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறது இத்தாலி. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இவர்கள் மீதான விசாரணையை நடத்த கொல்லத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்கிறார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago