முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி அறிவிப்பு- தங்கம் தென்னரசு கண்டனம்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.- 25 - பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்படுவது குறித்து கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்துள்ளது தன்னிச்சையான முடிவாகும் என தங்கம் தென்னரசு பகிரங்கமாக கண்டனம் தெரிவித்துள்ளார். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்து மாணவர்களிடையேயும், பெற்றோரிடமும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் திருத்தும்பணி முடிவடைந்து தற்போது மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பல லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துவரும் பிளஸ் 2 முடிவுகள் மே மாதம் 2வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கல்வித்துறை செயலாளர் சபீதா கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றபோது, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் 14ம் தேதி வெளியாகும் என்றார். இதுவே அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவும் கருதப்பட்டது.
ஆனால், இதற்கிடையில் நேற்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கல்வித்துறை செயலாளரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தங்கம் தென்னரசு கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வுகள் முடிந்ததும், மார்க்குகள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும், கல்வித்துறை அதிகாரிகள், செயலாளர் ஆகியோர் அமைச்சருடன் ஆலோசனை நடத்தி, அதன்பிறகு முதலமைச்சரின் ஒப்புதல் பெற்ற பிறகே பிளஸ் 2 தேர்வு முடிவுகளை கல்வி அமைச்சர் வெளியிடுவது வழக்கமாகும்.
ஆனால், இம்முறை எந்தவித ஆலோசனையும் நடத்தாமல், கல்வித்துறை செயலாளர் அறிவித்திருப்பது தன்னிச்சையான செயலாகும். இதனை கண்டிக்கிறோம்.
இவ்வாறு தங்கம் தென்னரசு கூறினார்.-*

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்