முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாய்பாபா ஒரு துருவ நட்சத்திரம் டாக்டர் சேதுராமன் புகழாரம்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

மதுரை,ஏப்.- 25 - மறைந்த சாய்பாபா ஒரு துருவ நட்சத்திரமாக விளங்கினார் என்று டாக்டர் சேதுராமன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். இது  குறித்து அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சாய்பாபா அவரது உடல்நிலை குறித்து ஆன்மீக உலகில் துருவநட்சத்திரம் போல் நிரந்தர இடம்பிடித்து ஒளி வீசிக்கொண்டிருந்த புட்டர்பத்தி பகவான் ஜி இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம்  அடைந்தேன்.ஆன்மீக துறையில் இருந்தாலும் ஏழை, எளிய மக்களின் நலன் குறித்து மிக அதிகமாக அக்கறைகாட்டி மக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு திட்டங்களுக்கு தனது அறக்கட்டளை மூலம் பெரிய அளவில் நிதி உதவி செய்துள்ளவர் சாய்பாபா. இனம், மொழி, நாடு கடந்து உலகம் முழுவதும் அவருக்கு பக்தர்கள் உள்ளனர். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட உடன் அவரது பக்தர்கள் கடுமையான உண்ணாவிரதம், கூட்டு வழிபாடு மூலம்  உடல்நிலை சீராக தேறிவருவதற்கு பாடுபட்டனர். ஆனால் இயற்கை வென்றுவிட்டது. தனது பூதஉடலை திறந்து இயற்கையே ஆத்மரூபத்தில் கலந்து உலக மக்களுக்கு நன்மைகளை கிடைக்க சாய்பாபா உழைப்பார் என்பது நிச்சயம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்