முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்துக்கு வரும் - அல்பி மோர்கல்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஏப். 26 - இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இனிவரும் போட்டிகளில் சிறப்பா க ஆடி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தைப் பிடிக்கும் என் று அந்த அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான அல்பி மோர்கல் நம்பிக்கை தெரிவித்தார். 

ஐ.பி.எல். டி - 20 போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்த ஆட்டத்தில் கேப்டன் தோனி தலை மையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், புனே வாரியர்ஸ் அணியும் மோதின. 

சென்னை அணி இதுவரை 5  போட்டிகளில் ஆடி 2 ல் மட்டுமே வெற் றி பெற்று உள்ளது. இதனால் அணி பலவீனமான நிலையில் உள்ளது. எனவே அடுத்து வரும் போட்டிகள் சென்னை அணிக்கு முக்கியத்துவ ம் வாய்ந்த போட்டிகளாகும். 

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். - 4 -ம் பாகத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலை குறித்து அந்த அணியின் ஆல்ரவுண்ட ரான அல்பி மார்கெல் நிருபர்களிடம் தெரிவித்ததாவது - 

சென்னை அணிக்கு இந்தப் போட்டி முக்கியமானது தான் என்றாலும் இன்னும் நாங்கள் வாழ்வா? சாவா? நிலையில் இல்லை. எங்களது வீரர்கள் இன்னும் தன்னம்பிக்கையுடன் உள்ளனர். 

இந்தப் போட்டியிலும் இனி வருகிற போட்டிகளிலும் நாங்கல் சிறப் பாக ஆடி முதல் இடத்துக்கு வருவோம் என்று நம்புகிறோம். இதற் காக கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம். 

பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட உரிய திட்டங்களை வகு த்து உள்ளோம். ஐ.பி.எல். தொடரைப் பொறுத்தவரை தற்போது உள்ள நிலையில் மும்பை அணி நல்ல பார்மில் உள்ளது. 

அதே போல வர நாங்களும் எங்களை தயார் படுத்தி வருகிறோம். இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று எங்களது திற மையை நிரூபிப்போம். 

எங்கள் வீரர்களில் சிலர் சரியாக ஆட முடியாத நிலையில் உள்ளனர். ஆனாலும் இது கவலை அளிக்கும் வகையில் இல்லை. தோனி பேட்டி ங் செய்த போது, கால் மூட்டில் சிறிது காயம் ஏற்பட்டது. அது கவ லை அளிக்கும் நிலையில் உள்ளது. 

எங்களுக்கு சில போட்டிகளில் பலவீனமான நிலை ஏற்கனவே ஏற்பட்டு பின்னர் அதில் இருந்து மீண்டு விட்டோம். அதே போல இப்போ தும் மீண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்