முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரீஸில் உள்ள ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

பாரீஸ், ஏப். - 1 - பாரீஸில் உள்ள ்ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அவசரமாக கீழே இறக்கப்பட்டனர்.  பாரீஸில் உள்ள ்ஈபிள் டவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து சுற்றிப் பார்த்துச் செல்கின்றனர். இந்த நிலையில் அங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ்ஈபிள் டவரை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த 1400 பேர் அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் டவர் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே இது புரளி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்