எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஏப்.26 - தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. மீது 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ.அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி ஒரு கூட்டுச்சதியாளர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது ஊழலுக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனாலும் எதிர்பார்த்தபடி குற்றப்பத்திரிக்கையில் தயாளு அம்மாள் பெயர் இடம்பெறவில்லை. ராசா லஞ்சம் வாங்கியதாக குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2008 ம் ஆண்டு செல்போன் கம்பெனிகளுக்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்த இழப்பிற்கு தி.மு.க.வை சேர்ந்த அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆண்டி முத்து ராசாவே முழுப்பொறுப்பு என்றும் தணிக்கை குழு குற்றம்சாட்டியிருந்தது. இந்த அறிக்கை பத்திரிகைகளில் வெளி வந்தபோது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உலகிலேயே நடந்த மிகப்பெரிய இமாலய ஊழல் இதுதான் என்று அமெரிக்க பத்திரிகைகளே வாயை பிளக்கும் அளவுக்கு செய்திகளை வெளியிட்டன. இதனால் இந்த ஊழல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலால் ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதை அடுத்து அவரது வீடுகளிலும் அவரது உதவியாளர்கள் வீடுகளிலும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்தது.
மேலும் இந்த ஊழல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த ஊழல் வழக்கை தங்களது கண்காணிப்பில் சி.பி.ஐ.அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் எனறு சுப்ரீம் கோர்ட்டு கட்டளையிட்டது.
இதை அடுத்து ஆ.ராசாவிடம் துருவித் துருவி சி.பி.ஐ.அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பிறகு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே ஒரு நாள் ஆ.ராசா கைது செய்யப்பட்டார். அடுத்து அவரது உதவியாளர்களான சந்தோலியா, சித்தார்த் பெகுரா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஆ.ராசாவும் இரு உதவியாளர்களும் பின்னர் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சி.பி.ஐ.காவலில் எடுக்கப்பட்டனர். சி.பி.ஐ. காவல் முடிந்ததை அடுத்து இவர்கள் மூன்று பேரும் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இப்போதும் திகார் சிறையில்தான் உள்ளனர்.
இந்த நிலையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு கம்பெனிக்கு கிடைத்த ஊழல் பணம் கலைஞர் டி.வி.க்கு கைமாறியதாக செய்திகள் வெளியாயின.
முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் குறைந்த ஏலத்திற்கு 2ஜி. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் என்ற கம்பெனி தனது துணை நிறுவனத்தின் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடியை கொடுத்ததாக செய்திகள் வெளியாயின.
ஆனால் இந்த ரூ. 214 கோடியை அதே கம்பெனியிடம் தாங்கள் திருப்பி கொடுத்துவிட்டதாக கலைஞர் டி.வி. நிர்வாகம் கூறினாலும் கூட கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடியை அளித்தது தொடர்பாக ஸ்வான் டெலிகாம் நிர்வாக தலைவர் பல்வாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
இதை அடுத்து சி.பி.ஐ. காவலில் சிறிது நாட்கள் இருந்த பல்வாவும் பிறகு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவின்படி அதே திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக 80,000 பக்கங்களை கொண்ட முதலாவது குற்றப்பத்திரிகை கடந்த 2ம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று இரண்டாவது ( துணை ) குற்றப்பத்திரிகை நேற்று இதே நீதி மன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் தி.மு.க.தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகளும் கலைஞர் டி.வி.யில் 20 சதவீத பங்குகளை வைத்திருப்பவருமான கனிமொழி எம்.பி. பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கு உடந்தையாக சதித்திட்டம் தீட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி ஒரு கூட்டுச்சதியாளர் என்று இந்த துணை குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் கருணாநிதியின் மனைவியும் கலைஞர் டி.வி.யில் 60 சதவீத பங்குளை வைத்திருப்பவருமான தயாளு அம்மாள் பெயர் இந்த குற்றப்பத்திரிகையில் எதிர்பார்த்தபடி இடம் பெறவில்லை.
கலைஞர் டி.வி.யில் தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும் கனிமொழிக்கு 20 சதவீதமும், அதன் நிர்வாக இயக்குனர் சரத் குமாருக்கு 20 சதவீதமும் பங்குகள் உள்ளன.
ஆ.ராசா மீது லஞ்சம் வாங்கியதாக குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தில் ரூ.200 கோடி ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாகீத் உஸ்மான் பல்வாவின் பங்குதாரர் நிறுவனம் ஒன்றின் மூலமாக கலைஞர் டி.வி.க்கு கைமாறியுள்ளது என்பதை ஏற்கனவே சி.பி.ஐ, கோர்ட்டில் சி.பி. ஐ.அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குசேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலமாக இந்த பணம் கலைஞர் டி.வி.க்கு சென்றதாகவும் சிபிஐ. தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவர் மீதும் இபிகோ. ( இந்திய தண்டனைச் சட்டம் ) 120 பி. ( கிரிமினல் சதித்திட்டம் ) இபிகோ. 468 ( போலி மற்றும் மோசடி ) இ.பி.கோ. 471 ( உண்மையான ஆவணம் போல போலி ஆவணங்களையும் எலக்ட்ரானிக் பதிவுகளையும் பயன்படுத்துதல் ) இபிகோ. 420 ( மோசடி மற்றும் ஏமாற்றுதல் , கண்ணியமற்ற முறையில் சொத்துக்களை அனுமதித்தல் ) இபிகோ. 109 ( உடந்தையாக இருத்தல் ) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் ஆ.ராசா மற்றும் 11 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
அவர்களின் பெயர்கள் வருமாறு
முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் தொலை தொடர்பு துறை செயலாளர் சித்தார்த் பெகுரா, ராசாவின் முன்னாள் தனிசெயலாளர் ஆர்.கே. சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாகீத் உஸ்மான் பல்வா, யுனிடெக் ஒயர்லெஸ் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, மும்பையை சேர்ந்த டி.பி.ரியாலிட்டீஸ் நிறுவன இயக்குனர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் தொலை தொடர்பு குழும நிர்வாக இயக்குனர் கவுதம் தோஷி, இதே ரிலையன்ஸ் கம்பெனியின் இரு துணை தலைவர்களான ஹரி நாயர், சுரேந்திர பிப்பாரா, கனிமொழி ஆகியோர் உள்பட 11 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த குற்றப்பத்திரிகையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெறுவதற்கு எடிசலாட் டி.பி. டெலிகாம் நிறுவனமும் யுனிடெக் நிறுவனமும் தகுதியற்ற நிறுவனங்களாக இருந்தன. ஆனால் இந்த நிறுவனங்களை தகுதியுள்ளவைகளாக மாற்றுவதற்காக ராசா விதிமுறைகளையே திருத்தினார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இருக்கும் விதிமுறைகளுக்கு பதிலாக ராசா முன்னுரிமை பட்டியலை திருத்தியதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி கம்பெனி தரகர் நீரா ராடியா உள்பட 125 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒரு ஊழல் வழக்கில் நாட்டின் உயர் மட்ட சட்ட அதிகாரியாக இருக்கும் ஒருவர் சாட்சியாக சேர்க்கப்பட்டு ஆஜராவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ராசா யுனிடெக் மற்றும் ஸ்வான் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார்.இதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான தேதியை முன் கூட்டியே ராசா தன்னிச்சையாக முடிவு செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி லைசென்ஸ் வழங்கும் விஷயத்தில் பிரதமரின் அலுவலகம் , சட்ட அமைச்சகம், தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் ஆகியவற்றின் ஆலோசனைகளையும் ராசா புறக்கணித்து விட்டார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக இதுவரை ஆ.ராசா, பெகுரா, சந்தோலியா, பால்வா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 நிறுவன அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி எம்.பி. இதுவரை கைதாகவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.