முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் பிரதமராவதை வரவேற்கிறேன்: பிரதமர்

சனிக்கிழமை, 6 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 7 - ராகுல் காந்தி பிரதமர் ஆவதை எந்த நேரமும் வரவேற்க தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி தலைவராகவும், பிரதமர் பதவி மூலம் மன்மோகன்சிங் ஆட்சிக்கு தலைவராகவும் உள்ளனர். இந்த இரு அதிகார மையங்கள் வெற்றிகரமாக செயல்பட முடியாது. வரும் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கருத்து வெளியிட்டார். ஆனால் இதை காங்கிரஸ் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி நிராகரித்தார். 

இந்த நிலையில், டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த பத்ம விருது வழங்கும் விழாவின் இடையே நிருபர்களிடம் பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நான் மீண்டும் பிரதமர் பதவி வகிக்க வாய்ப்பு உள்ளது என்றும் சொல்வதற்கில்லை. இல்லை என்றும் சொல்வதற்கில்லை. இதெல்லாம் ஊடகங்களின் வேலை. இது ஒன்றுக்கும் பலனற்ற விவாதம். ராகுல் பிரதமராக எப்போதும் என் ஆதரவு உண்டு என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்