முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியுடன் என்னை ஒப்பிடாதீர்: ம.பி. முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

போபால், ஏப்ரல்.8 - குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கேட்டுக்கொண்டார். நரேந்திரமோடியுடன் என்னை ஒப்பிடுவது தவறானதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

போபாலில் நடைபெற்ற பாஜக 33-வது துவக்க நாள் விழாவில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்தியபிரதேச மாநில முதல்வராக நான் பணியாற்றி வருகிறேன். இதற்கு மேல் எனக்கு வேறு எதிலும் விருப்பமில்லை. எனவே என்னை குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் எந்தத் தருணத்திலும் ஒப்பிடுவதை ஏற்க மாட்டேன் என்று சவுகான் கூறினார்.

பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வகையில் மோடி பாஜக ஆட்சிமன்றக் குழுவில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார். ஆனால் அதே நேரத்தில் அந்த பதவியிலிருந்து சவுகான் நீக்கப்பட்டார். எனவே அவர் அந்த பதவி பறிபோன வருத்தத்தில் உள்ளார். எனவே தான் அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த நிகழ்ச்சியில்  அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியும் மற்ற கட்சிகளும் ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, பாஜக ஆளும் மாநிலங்களில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அங்கு நல்லாட்சி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

மத்தியபிரதேச மாநிலத்தில் இநத ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக தொண்டர்கள் நன்கு கஷ்டப்பட்டு பாஜக ஆட்சியை இந்த மாநிலத்தில் 3-வது முறையாக மீண்டும் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும் சவுகான் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்