முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீசாய்பாபாவின் உடலுக்கு மன்மோகன்சிங்-சோனியா அஞ்சலி

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி, ஏப். 27 - புட்டபர்த்தி ஸ்ரீசாய்பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, அம்பிகா சோனி ஆகியோர் நேற்று மாலை டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் புட்டபர்த்தி வந்தனர். பின்னர் அவர்கள் பிரசாந்தி நிலையம் சென்று சாய்பாபாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மற்றும் சோனியா வருகையையொட்டி விமானநிலையம் முதல் ஆசிரமம் வரை மத்திய போலீஸ் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி இறுதிச்சடங்கில் பங்கேற்றார். இலங்கை அதிபர் ராஜபக்ஷே சாய்பாபாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வர திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் ஐ.நா. சபை ராஜபக்ஷே போர்க்குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் இருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து அவரை சர்வதேச கோர்ட்டில் ஆஜர்படுத்தி தண்டனை அளிக்கும்படி தமிழக தலைவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இதையடுத்து அவருக்கு பதிலாக ராஜபக்ஷேவின் சகோதரர் பாசில் ராஜபக்ஷே புட்டபர்த்தி வந்தார். மத்திய போலீஸ்படை பாதுகாப்புடன் அவர் சாய்பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் சாய்பாபாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்