முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்செயலாக குண்டு வெடித்ததில் ராணுவ வீரர்கள் காயம்

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்,ஏப்.13 - வடக்கு காஷ்மீரில் உள்ள ராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்த கையெறி குண்டு தற்செயலாக வெடித்த சிதறியதில் வீரர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் வடக்கு காஷ்மீர் பகுதியில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் இருக்கும் ஒரு ராணுவ முகாமில் நேற்று நடந்தது என்று போலீசார் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநில கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஹந்த்வாரா முகாமில் உள்ள ஆயுதங்களை ராணுவ வீரர்கள் சுத்தம் செய்து கொண்டியிருந்தபோது கையெறி குண்டு திடீரென்று தற்செயலாக வெடித்தது. இதில் காயம் அடைந்த 6 ராணுவ வீரர்களும் உடனடியாக ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். கடந்த புதன்கிழமை அன்று மெளல்தரி வனப்பகுதியில் தீவிரவாதிகள் மறைத்துவைத்திருந்த ஆயுதங்களையும் வெடிமருந்து பொருட்களையும் கைப்பற்றினர். இவைகளில் ஏதாவது ஒன்று வெடித்ததா என்பது குறித்து தெளிவாக எதுவும் தெரியவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்