முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலையில்லா மடிக்கணிணிகள்: ஆர்.சாமி வழங்கினார்

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

மேலூர், ஏப்.16 - மேலூர் அரசுக்கல்லூரியில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா மடிக்கணிணிகளை 510 பேருக்கு ஆர்.சாமி எம்.எல்.ஏ வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சாமி பேசுகையில், தனியார் கல்லூரிகளுக்கு நிகராக அரசு கலைக் கல்லூரிகளை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இந்தியாவிலேயே சைக்கிள் திட்டத்தை அறிமுகப்படுத்தி சைக்கிளை கொடுத்து வருகிறார் . கிராமபுற மாணவர்களை ஊக்கப்படுத்தி கல்விதரத்தை உயர்த்துகிறார். ஆசிரியர்களுக்கு பணி உத்தரவுகளை வழங்கி அவர்களுக்கு எவ்வித செலவுமின்றி உத்தரவுகளை  வழங்குகிறார் என்று கூறினார். நிகழச்சியில் கல்லூரி முதல்வர் முனைவ்ர் பாலசுந்தரம் , மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ஜபார், மேலூர் நகர் மன்ற தலைவர் சரவணன், மேலூர் யூனியன் சேர்மன் செல்வராஜ், கொட்டம்பட்டி யூனியன் சேரமன் வெற்றிச்செழியன், மாவட்ட கவுன்சிலர் ராகவன், மேலூர் யூனியன் துணைதலைவர் முருகன், கொட்டமாமிப்படி வைஸ் சேர்மன் குலோத்துங்கன் சூரக்குண்டு ஊராட்சி மன்ற தலைவ்ர் துரைஅண்ணா, நாவினிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் , நாவினிப்பட்டி ஒனறியகுழு உறுப்பினர் சோலையம்மாள், மேலூர் நகர் மன்ற உறுபபினர்கள் சந்திரன், பாண்டித்துறை, பாலகிருஷ்ணன், ராஜி நாகசுப்பிரமணியன், முன்னாள் நகர் மன்ற தலைவர் சாகுல்ஹமீது, ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம், கமால்முகமது, சீனி, கலைச்செல்வன், இளங்கோ, மீரா உசேன், ஆச்சி அய்யாவு, ஆகியோர் கலந்து கொண்டன்ர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்