முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமலையில் மின் கசிவால் தீ: பல லட்சம் நாசம்!

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, ஏப். 17 - திருப்பதி, திருமலை ஏழுமலையான் கோயிலில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சமையல் பொருள்கள் எரிந்து சாம்பலாயின. கோயில் ஊழியர்கள் மற்றும் தீயனைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து தரிசனம் செய்யும் திருமலையில், பக்தர்களுக்காக லட்டு மற்றும் பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த லட்டு மற்றும் பிரசாதங்கள் தயாரிப்பதற்கான பொருள்கள் வைக்கும் உணவுக் கிடங்கில் நேற்று முன்தினம் திடீர் மின் கசிவு ஏற்பட்டது. 

இதில் அங்கிருந்து சுவர் தீப்பிடித்து எரிந்தது. தீ வேகமாக பரவி, பிரசாதம் தயாரிக்க வைத்திருந்த பொருட்களில் பரவியது. தேவஸ்தான ஊழியர்களும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றாலும் முடியவில்லை. வெகு நேர போராட்டத்துக்குப் பிறகே தீ அணைக்கப்பட்டது. ஆனால் இந்த விபத்தில் பல லட்ச ரூபாய் பெறுமானமுள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின. திருமலையில் தீ விபத்துகள் இப்போது அடிக்கடி நிகழ ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்