எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஆப்.23- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மதுரை ரேஸ்கோர்ஸ்சில் அமைந்துள்ள டாக்டர்.எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ முன்னிலையில், பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் முனைவர்.வைகைசெல்வன் திறந்து வைத்து, இறகுப்பந்து விளையாட்டு மைதானத்தில் முதல் இறகுபந்து விளையாட்டை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையனும், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போசும் முன்னிலை வகித்தார்கள்.இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ பேசும் பொழுது தெரிவித்ததாவது:
மனிதனின் வாழ்க்கைக்கு விளையாட்டு என்பதும், உடற்பயிற்சி என்பதும் இன்றைய சூழலில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. நான் ஏறக்குறைய 10 ஆண்டுகள் மெல்லோட்ட மையத்தில் நடைபயிற்சி மேற்கொண்டு இருக்கிறேன். உயர்ந்தவர், தாழ்ந்தவர், சாமானியர், அரசு உயர்அலுவலர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரும் சமமாக, தோழமை உணர்வுடனும், நட்புணர்வுடனும் ஒரு சேர கூடும் இடம் இந்த மெல்லோட்ட மையமாகும். ஏற்றத்தாழ்வுகளை களைந்து எரிகின்ற இடமாக இந்த இடம் திகழ்கிறது. நான், இந்த மெல்லோட்ட மையத்தில் உள்ள அனைவருடனும் உற்ற தோழனாக, சகோதரனாக என்றென்றும் இருப்பேன். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்து பெருமைப்படுத்தியதற்கு மெல்லோட்ட மைய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் முனைவர்.வைகைசெல்வன் பேசும் பொழுது தெரிவித்ததாவது: ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற உடல் அளவிலும், மனதளவிலும், அறிவார்ந்த செயல்பாட்டிலும் முழுமை பெற்றவராக இருத்தல் வேண்டும். உடல் அளவில் என்பது நல்ல உடற்பயிற்சியும், நடைபயிற்சியும் மேற்கொண்டு உடல் அளவில் வலுவுள்ளவர்களாக இருக்க வேண்டும். உப்பு, புளி, காரம் இல்லாத உணவையே உண்ண வேண்டுமென வள்ளலார் கூறியுள்ளார். ஒரு மனிதனின் வாழ்நாளின் எண்ணிக்கையை நிர்ணயிப்பது அவருடைய இடுப்பை சுற்றியுள்ள வயிற்றுப் பகுதியாகும். தொந்தி மரணத்திற்கு விடுக்கும் தந்தி.
இரண்டாவதாக மனப்பயிற்சி, மனம் என்பது எப்போதும் சந்ததேகப்பட்டு கொண்டே இருக்கும். இந்த மனதை கட்டுப்படுத்தி ஒரே புள்ளியில் வைக்க வேண்டும். மூன்றாவதாக அறிவு. அறிவுடையார் எல்லாம் உடையார். அறிவு அற்றம் காக்கும் கருவி என்று அய்யன் வள்ளுவரே கூறியுள்ளார். ஆகவே, உடலளவிலும், மனதளவிலும், அறிவார்ந்த அளவிலும் ஒரு மனிதன் முழுமையடைந்தால், அவன் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது மிகவும் எளிதாகி விடுகிறது. அந்த வகையிலே உடல் அளவில் ஒரு மனிதனை வலுவாக்குகின்ற இந்த விளையாட்டு அரங்கை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைவரும் இந்த விளையாட்டு அரங்கை நல்லமுறையில் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.முத்துராமலிங்கம் (திருமங்கலம்), திரு.சுந்தர்ராஜன் (மதுரை மத்தியம்), மதுரை மாநகராட்சி துணை மேயர் ஆர்.கோபாலகிருஷ்ணன், 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் புதூர்.அபுதாகிர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மெல்லோட்ட மைய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.முருகன் வரவேற்புரையாற்றினார். முடிவில் மெல்லோட்ட மைய இணைச்செயலாளர் சேகர் நன்றிகூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.