எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிகாகோ, ஏப், - 26 - சிகாகோவில் மே மாதம் 4ம் தேதி பொன்னியின் செல்வன் நாடகம் அரங்கேற உள்ளது. இதற்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். இது குறித்து சிகோகோ தமிழ்ச் சங்க துணைத் தலைவர் சோமு அனுப்பியுள்ள குறிப்பு: பொன்னியின் செல்வன் நாடகத்தை சிகாகோவில் அரங்கேற்ற வேண்டும் என்கின்ற எண்ணம் 2012 ஜனவரி மாதத்திலேயே முளைவிட்டது. இந்த மாபெரும் படைப்பை மேடை ஏற்ற ஒரு வருட காலமாவது தேவைப்படும் என்று திட்டமிட்டு, 2013மே மாதம் மேடையேற்றுவது என்ற முடிவோடு ஆயத்த வேலைகளை ஆரம்பித்தோம். கலிபோர்னியா அபிராமி பைன் ஆர்ட்ஸ் குழுவைச் சேர்ந்த பாகீரதி சேஷப்பன் இயக்குனராக செயல்பட இசைந்தார். இந்த நாடகத்தில் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் தேவைப்பட்டனர். கல்கி விவரித்த உருவ தோற்றத்திலும், தூய தமிழ் பேசும் ஆற்றல் உள்ளவர்களையும் தேர்ந்தெடுக்க 2012 செப்டம்பர் மாதம் தேர்வு (யரனவைழை)ெ நடைபெற்றது. பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் நம்மில் பலர் நாடகங்களில் ஆசை ஆசையாய் நடித்து இருப்போம். ஆனால், படிப்பு முடிந்தவுடன் அந்த ஆசையை அடி மனதில் மூட்டை கட்டி வைத்து விட்டு, இந்த அவசர உலகத்தின் தினசரி அலுவல்களில் தொலைந்து போய்விடுகிறோம். எப்பொழுதாவது அந்த பழைய கால நினைவுகள் வரும்பொழுது, நாம் போட்ட கோவலன்டி கண்ணகி வேடங்கள் கண் முன் நிற்கும். பேசிய வீர வசனங்கள் காதில் சலங்கையாய் ஒலிக்கும். அத்தகைய நினைவுகளை மெய்ப்பிக்க சிகாகோ அன்பர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. நேர்முகத் தேர்விற்கு 35 பேர் வந்தனர். புதினத்தில் இருந்து, அவரவர் தமக்குப் பிடித்த கதாபாத்திரங்களைப் போல் பேசியும், நடித்தும் காட்டினர். நடிக, நடிகையர் தேர்வு முடிந்தாகி விட்டது. ஆனால் நாற்பதுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் இருப்பதால், ஒரே சமயத்தில் அனைவரையும் கொண்டு பயிற்சி செய்வது கடினம். அதனால், பழையாறை, காஞ்சி மற்றும் கடம்பூரில் வாழும் கதாபாத்திரங்களை ஒரு குழுவாகவும், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் பாண்டிய ஆபத்துதவிகளை மற்றொரு குழுவாகவும் பிரித்து ஞாயிறு தோறும் பயிற்சி மேற்கொண்டோம். இது நாளும் ஓவியர் மணியம் அவர்களின் சித்திரங்களில் வாழ்ந்திருந்த கதாபாத்திரங்ககளை நடிகர்கள் மூலமாக உயிர்ப்பிக்கத் தேவையான உடைகள், இந்த நாடகத்தைக் காண வரும் ரசிகர்களை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சோழ சாம்ராஜ்ஜியத்திற்கு அழைத்துச் செல்ல, தேவையான மேடைப் பொருட்கள் என்று... அப்பப்பா! இந்த முயற்சி சிகாகோ அன்பர்களிடையே பொன்னியின் செல்வன் புதினத்தின் மீது ஒரு புதிய ஆர்வத்தைத் தூண்டி உள்ளது. பலர் இந்தப் புதினத்தை முதல் முறையாகவும், ஏற்கனவே படித்தவர்கள் பலமுறையாகவும் படிக்கத் துவங்கி உள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரியது. தாய் நாட்டை விட்டு வெகு தொலைவில் வாழ்ந்தாலும், இந்த முயற்சியில் ்டுபட்டதின் பயனாய் கிடைத்த புதிய உறவுகளின் நெருக்கத்தாலும், பகிர்ந்து கொண்ட தமிழ் ஆர்வத்தாலும், இங்கேயே நாங்கள் தாய் நாட்டைக் கண்டோம்! திட்டமிட்டபடி 30க்கும் மேலான பயிற்சி அமர்வுகளை நடத்தி, இன்று தமிழ்த் தாயின் ஆசியுடனும் கலை மகளின் துணையுடனும் உங்கள் முன்னால், இந்த ஒப்பற்ற வரலாற்றுப் புதினத்தை மேடையில் படைக்க இருக்கிறோம். இந்த முயற்சிக்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா, அப்துல் காதர், சினிமா மற்றும் சின்னத்திரை ஆலோசகர் வெங்கட் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். கலாம் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற மாபெரும் படைப்பு முந்தைய தலைமுறைகள் மட்டுமின்றி இன்றைய தலைமுறையையும் ்ர்க்கும் ஒரு படைப்பு. இந்த அற்புதமான படைப்பை நாடகமாக்கும் முயற்சி பெரும் சாதனை தான். அதிலும் சிகோக்கோவில் வாழும் தமிழர்களைக் கொண்டே நாடகத்தை நடத்துவது சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் அபார நம்பிக்கையைக் காட்டுகிறது. சிகாகோ தமிழ்ச் சங்கம் இதை செவ்வனே சாதிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் பண்பாட்டையும் போற்றிப் பின்பற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளால் தான் தமிழ் இன்றும் இளமையாகவே இருக்கிறது. சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பணி சிறக்கவும் நாடகம் சிறப்புற நடைபெறவும் வாழ்த்துகிறேன். சங்கத்தின் நிர்வாகிகள், நாடகத்தின் இயக்குனர், பங்கேற்கும் கலைஞர்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் என்று அப்துல் கலாம் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.