எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.- 26 - அழகர் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அழகர் பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் நேற்று மதுரை வைகை ஆற்றில் இறங்கினார். அழகர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தினமும் பல்லக்கில் சுந்தர்ராஜபெருமாள் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 23 ம்தேதி மாலை கள்ளழகர் வேடம் பூண்டு, கண்டாங்கி சேலை அணிந்து, கையில் வேல்கம்புடன் மலையில் இருந்து அழகர் மதுரைக்கு புறப்பட்டார். வழி நெடுக திருக்கண் மண்டகப்படிகளில் எழுந்தருளிய அழகரை நேற்றுமுன்தினம் காலை 6 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூன்று மாவடியில் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பிறகு அழகர் பல்வேறு மண்டபகப்படிகளில் எழுந்தருளி நேற்றுமுன்தினம் மாலை 5.30 மணிக்கு அவுட்போஸ்ட் வந்தடைந்தார். அங்கும் பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்று தரிசித்தனர். இதன் பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்களின் மத்தியில் நீந்தியபடி வந்த அழகர் இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலை அடைந்தார். இங்கு விடிய,விடிய அழகருக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தல்லாகுளம் மற்றும் கோரிப்பாளையம் பகுதியில் விடிய,விடிய பக்தர்கள் திரண்டு இருந்தனர். அழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக கடந்த 20ம்தேதி வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த22ம் தேதி மதுரையை வந்து அடைந்தது. அழகர் இறங்குவதற்காக கோரிப்பாளையம் ஆழ்வார்புரம் பகுதியில் வைகை ஆற்றுக்குள் மண்டகப்படிகள் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு தல்லாகுளம் பிரசன்னபெருமாள் கோவிலில் அழகருக்கு திருமஞ்சணம் சாத்தப்பட்டு அழகர் பெருமான், பிரசித்தி பெற்ற தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி, திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அழகர் தன் சுந்தர தோளில் ஏற்றுக்கொண்டு ஆயிரம் பொன் சப்பரத்திற்கு எழுந்தருளினார். இதன் பிறகு அழகர் அதிகாலை 2.30 மணி அளவில் கருப்பணசாமி கோவிலுக்கு வந்தடைந்தார். பின்னர் இங்கிருந்து புறப்ப்பட்ட அழகர் பல்வேறு மண்டபகப்படிகளில் எழுந்தருளி நேற்று காலை 7.35 மணிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது வைகை ஆற்றுக்குள்ளும், வைகை கரையோரமும் திரண்டு இருந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை பிளந்தது. வைகை ஆற்றுக்குள் மாநகராட்சி மண்டகப்படி மற்றும், அறநிலையத்துறை மண்டபகப்படியில் எழுந்தருளிய அழகர் மீண்டும் வைகை ஆற்றுக்குள் இருந்து புறப்பட்டு பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளி பிற்பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டகப்படிக்கு வந்தடைந்தார். அங்கு கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. இங்கிருந்து மதியத்திற்கு மேல் புறப்பட்ட அழகர் இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலை அடைந்தார். அங்கு விடிய,விடிய அழகருக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து இன்று காலை சேஷவாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றுக்குள் உள்ள தேனூர் மண்டபகப்படிக்கு அழகர் வருகிறார். இங்கு மதியம் 2.30 மணியளவில் கருட வாகனத்தில் எழுந்தருளும் அழகர் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்து விட்டு பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிவிட்டு மீண்டும் இரவு 10 மணியளவில் ராமராயர் மண்டகப்படிக்கு வருகிறார். இங்கு விடிய,விடிய அழகரின் தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது. அடுத்த நாள் காலை மோகினி அவதாரத்தில் தோன்றி அங்கிருந்து புறப்பட்டு இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தை அடைகிறார். 28ம்தேதி அதிகாலை 2.30 மணிக்கு அழகர் பூப்பல்லக்கில் புறப்பட்டு மலையை நோக்கி செல்கிறார்.
அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மதுரையில் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதிலிருந்து போலீசார் கேமரா மூலம் கூட்டத்தை கண்காணித்தனர்.
----------------
டிசி பாக்ஸ்
--------
பச்சை பட்டின் மகிமை தான் என்ன?
வைகை ஆற்றுக்குள் இறங்கும் அழகர் என்ன பட்டு உடுத்தி இறங்குகிறார் என தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பார்கள். நேற்று ஆற்றில் இறங்கிய அழகர் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார். இது நாட்டில் விவசாயத்தையும், செழுமையையும் அதிகரிக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்தனர்.
இதற்கு ஏற்றார்போல் நேற்று அழகர் மதுரை நகருக்குள் நுழைந்ததுமே கடந்த 3 மாதத்திற்கு மேல் மழையையே பார்க்காத மதுரையில் நேற்று இரவு மழை கொட்டி தீர்த்தது பக்தர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தியது.
----
வைகையில் தண்ணீரை பார்த்த
பக்தர்கள் கண்களில் ஆனந்த கண்ணீர்
மதுரையில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் எங்கும் வறட்சியாக இருந்தது. கடந்த தைமாதம் நடந்த மீனாட்சி அம்மன் கோவில் தெப்பதிருவிழாவின் போது கூட மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் நிலை தெப்பம் நடந்தது. இதே போல் வைகை ஆற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தது.
ஆனால் மதுரை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் தீவிர நடவடிக்கை எடுத்து வைகை அணையில் இருந்து தண்ணீரை திறக்கசெய்து அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு தண்ணீர் வந்தது. இதனால் அழகரை தரிசிக்க வந்த பக்தர்கள் வைகையில் தண்ணீரை பார்த்ததும் ஆனந்த கண்ணீர் விட்டு முதல்வர் ஜெயலலிதாவிற்கும், மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்தனர்.
---
சைவத்தையும்- வைணவத்தையம்
இணைத்த மன்னர் திருமலைநாயக்கர்
அழகர் வைகை ஆற்றுக்குள் இறங்கும் நிகழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வரும் அழகர், அவர் வருவதற்குள் திருக்கல்யாணம் முடிந்து விடுவதால் கோபித்துக்கொண்டு ஆற்றுக்குள் இறங்கி வண்டியூர் செல்வதாக கூறப்படுகிறது. ஆனால் மீனாட்சி திருக்கல்யாணத்திற்கும், அழகர் மதுரை வருவதற்கும் சம்பந்தமே கிடையாது. அதாவது மீனாட்சி திருக்கல்யாணம் மாசிமாதம் நடந்து வந்தது. அழகர் சித்ரா பவுர்ணமி அன்று வைகை ஆற்றுக்குள் இறங்குவது சித்திரை மாதம்.
மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் வைணவ பக்தர்களையும், சைவ பக்தர்களையும் ஒன்றாக இணைக்கும் பொருட்டு இரு திருவிழாவையும் இணைத்து நடத்தியதாக கூறப்படுகிறது.
--
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.