முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்வாடியில் கடத்தப்பட்ட சிறுவன் மங்க;ரில்மீட்பு மிரட்டல் விடுத்த வாலிபர்கைது

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

ராமநாதபுரம்,ஏப். - 26 - ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் கடத்தப்பட்ட சிறுவுன் மங்க;ரில் மீட்கப்பட்டுள்ளான். அவனை கடத்தி சென்று ரூ.5லட்சம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி அருகே உள்ள அறவாய்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் இபுராகீம் மூசா. அந்தமானில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி யாஸ்மின் சஜினா(20). இவர் உடல்நலம் சரியில்லாததால் தனது 2வயது மகள் முகம்மது யாசீனுடன் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவிற்கு வந்தார். கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி முதல் தர்காவில் தங்கியிருந்து ஆன்மீக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் யாஸ்மின்சஜினா தங்கியிருந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் வாலிபர் ஒருவர் தங்கியுள்ளார். இவர் சிறுவன் முகம்மது யாசீனுடன் நன்கு பழகி விளையாடி வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டு சிறுவனை விளைாயட யாஸ்மின்சஜினா அனுமதித்துள்ளார். இந்நிலையில் கடந்த 19-ந் தேதி பிற்பகல் 2மணி அளவில் யாஸ்மின்சஜினா குழந்தையை வாலிபரிடம் விட்டுவிட்டு பால் வாங்குவதற்காக சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது சிறுவனையும், வாலிபரையும் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இருவரையும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து யாஸ்மின்சஜினா இதுகுறித்து ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் வழக்குபதிவு செய்து இருவரையும் தேடிவந்தனர். இந்நிலையில் ஏர்வாடி தர்கா நிர்வாக சபை செயலாளர் செய்யது பாரூக் ஆலிம் என்பவரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட மர்மவாலிபர் சிறுவனை தான் கடத்தி வைத்துள்ளதாகவும், ரூ.5லட்சம் கொடுத்தால் சிறுவனை விட்டுவிடுவதாகவும், போலீசுக்கு தகவல் தெரிவித்தால் சிறுவனை உயிரோடு கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். அவரின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் மேற்கண்ட வாலிபர் கர்நாடக மாநிலம் மங்க;ரில் இருந்து பேசியுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருப்புல்லாணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்;டர் ஜேசுதாஸ் தலைமையில் ஏர்வாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்;டர் கணேசன், ஏட்டுகள் ஜாகீர்உசேன், ராமமூர்த்தி ஆகியோரை கொண்ட தனிப்படை போலீசார் மங்க;ர் விரைந்தனர். அங்கு சென்று சம்பந்தப்பட்ட செல்போன் எண் டவர் மூலம் விசாரணை செய்ததில் மேற்படி வாலிபர் கர்நாடக மாநிலம் சுரத்கள் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டம் சக்களேஸ்புரா பகுதியை சேர்ந்த முகம்மது என்பவரின் மகன் அப்துல்நாசிர்(வயது22) என்பது தெரியவந்தது. அவர்தான் சிறுவனை பிச்சை எடுக்க வைப்பதற்காக கடத்தி வந்தவர் என்பதும், ஆண் பையன் என்பதால் பிச்சைஎடுப்பதில் வருமானம் குறைவாக வந்ததால் அவனை வைத்து மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டது தெரியவந்தது. மேலும், தான் டீ குடித்துக்கொண்டிருந்தபோது தன்னிடம் இருந்து தப்பி சென்று விட்டதாகவும் தெரிவித்தான். இதனால் குழந்தையை தேடிச்சென்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அருகில் உள்ள சுரத்கள் போலீஸ் நிலையத்தில் விசாரித்தபோது மங்க;ர் ரோட்டில் அனாதையாக சுற்றித்திரிந்த சிறுவனை பொதுமக்கள் மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்திருப்பதாக தெரிவித்தனர். அங்கு சென்று பார்த்தபோது மேற்கண்ட சிறுவன் முகம்மது யாசின்தான் என்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் இருவரையும் மங்க;ர் கோர்ட்டில் நீதிபதி சுப்புலட்சுமி முன்பு ஆஜர்படுத்தி ஏர்வாடிக்கு அழைத்து வந்தனர். மீட்கப்பட்ட சிறுவன் முகம்மது யாசின் அவனது தாய் யாஸ்மின் சஜினாவிடம் ஒப்படைக்கப்பட்டான். கைது செய்யப்பட்டுள்ள அப்துல்நாசிரிடம் முதுகுளத்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் நடத்திய விசாரணையில் சிறுவனை கடத்தி பிச்சை எடுக்க வைத்து சம்பாதிக்கும் எண்ணத்தில் தான் கடத்தி சென்றுள்ளான் என்பதும், 5மொழிகள் தெரிந்து வைத்துள்ள அப்துல் நாசிர், 7வது வரை படித்துவிட்டு வேலை பார்க்காமல் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக சிறுவனை கடத்தியுள்ளான் என்பதும், இதற்காகவே திட்டமிட்டு ஏர்வாடி தர்காவிற்கு வந்து மனநோயாளி போல் தங்கியிருந்து சமயம் பார்த்து சிறுவனை தூக்கி சென்றுள்ளதும் தெரியவந்தது. அவனது பின்னனியில் யாராவது உள்ளனரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் தீவிர துப்பு துலக்கி உடனடியாக மீட்ட போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்