எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.27 - இலங்கை தமிழர் பிரச்சனை, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம், தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்க கடும் முயற்சி, பசிபோக்கும் திட்டங்கள் ஆகியவற்றை சிறப்பாக நிறைவேற்றிவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நேற்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியின் மன்றக் கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்றது. மன்றக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் ஒன்றை அவர் கொண்டு வந்தார்.
அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உலக வரலாற்றில் இந்த நூற்றாண்டு கண்டிராத வகையில் ஒரு இன அழிப்பு கொடூரத்தை இலங்கை தமிழர்கள் மீது ஏவி விட்ட சிங்கள இனவாத அரசை தட்டிக் கேட்கவும், போர்க்குற்றம் விசாரிப்பும், பொருளாதார தடையையும், இலங்கைக்கு எதிராக கொண்டுவர வேண்டும் எனும் கம்பீர குரல் எழுப்பி, உலகத் தமிழினத்தின் உரிமைக் குரலாக ஒலிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தொடர்ந்து இலங்கை அரசு ஒரு சார்பு நிலையோடு மீள் குடியேற்றம் எனும் பேரில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்துவதையும்,
தமிழனத்தின் மீதான ஒரு இன சிதைவை நடத்தி வருவதையும், கடுமையாக கண்டிக்கும் விதமாக, இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தி இலங்கைத் தமிழர்களின் கருத்தை அறிந்து அதற்கேற்ப தனி ஈழம் குறித்தான முடிவுகளை ஐநாவும், சர்வதேச சமூகமும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும், இதற்கு இந்திய துணைக் கண்டம் அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தின் புனிதமிக்க சட்டமன்ற பேரவையில் ஒரு புரட்சிகர தீர்மானத்தை இயற்றிய உலகத் தமிழர்களின் ஒரே ஒப்பற்ற தலைவர் முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாமன்றம் மனதார வாழ்த்தி உளமார வரவேற்று, இத்தகைய சுழைலில் மனித உரிமைகளை காலில் போட்டு நசுக்குகிற இலங்கை நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் தமிழக ஐபிஎல் விளையாட்டுகளில் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது என்று திடத்தோடு அறிவித்தும், இதற்கு முன்பே இலங்கை பங்கேற்கும் தெற்காசிய தடகள விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த முடியாது என ஆண்மை திறத்தோடு அறிவித்தும், தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி அத்துமீறி தமிழக மீனவர்களை தாக்கி அவர்களின் உடமைக்கு சேதம் விளைவித்து இதுவரை சுமார் 700 மீனவர்களை படுகொலை செய்திருக்கும் இலங்கை கடற்படை ராணுவத்தினருக்கு இந்தியாவில் ராணுவப் பயிற்சி அளிப்பது, கடைந்தெடுத்த கோழைத்தனம், கடும் கண்டனத்திற்கு உரியது என்பதையெல்லாம், வன்மையாக கண்டித்து, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்கும் தமிழகத்தின் கம்பீர முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாமன்றம் நெஞ்சாரப் போற்றி நிறைவுள்ளத்தோடு வாழ்த்துகிறது.
வான்மழை பொய்த்தாலும், வாஞ்சை கொண்ட தாய் மனம் பொய்க்காது எனும் விதமாக தொடர்ந்து பருவகாலம் பொய்த்து விட்ட நிலையில் தமிழகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் கடும் வறட்சியால் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கும் விவசாய பெருமக்களுக்கு, உதவிக்கரம் நீட்டும் உன்னத நோக்கோடு காவிரி படுகை மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகத்து விவசாய பெருங்குடி மக்களும், இதுவரை இந்திய தேசத்தில் எந்த மாநிலமும் வழங்கிடாத அளவில் வறட்சி நிவாரணம் வழங்க ஆணையிட்டிருக்கும், கனிவுமிகு தாயின் வள்ளல் மனத்தையும், வாரி வழங்கும் தயாள மனத்தையும், இந்த மாமன்றம் வரவேற்று போற்றுகிறது.
கடந்த ஆட்சி காலத்தில் போதிய கவனம் செலுத்தாததால் மிகை மின் உற்பத்தி மாநிலமாக இருந்த தமிழகம், மின் பற்றாக்குறை மாநிலம் என்கிற நெருக்கடியை எதிர்கொண்டு அறிவிக்கப்பட்டடிஅறிவிக்கப்படாத மின் வெட்டுகளை கடந்த 5 ஆண்டு காலமாக எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையிலிருந்து மீண்டும் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தைப் போலவே மிகைமின் உற்பத்தி மாநிலமாக தமிழகத்தை மீட்டெடுக்க கண் துஞ்சாது கடமையாற்றிவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்த மாமன்றம் நெஞ்சார நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
மின் பற்றாக்குறையை போக்கிட புதிய மின் உற்பத்தி நிலையங்களை துவக்கவும், மின் பற்றாக்குறையை நீக்கிட நீண்ட கால அடிப்படையில் மின் கொள்முதல் செய்திட திட்டமிட்டும், மாற்று முறை மின்சார உற்பத்தியை பெருமளவில் ஊக்குவிக்கும் விதமாக, சுரிைய ஒளி மின்சார உற்பத்தியை மக்கள் இயக்கமாக மாற்றிட மானியம் வழங்கி மக்களை ஊக்குவித்திட மதி நுட்ப முடிவுகளை மேற்கொண்டுவரும் புரட்சித் தலைவி அம்மா அவர்களை இந்த மாமன்றம் நெஞ்சாரப் போற்றி நிறைவுள்ளத்தோடு வாழ்த்துகிறது.
வயிறார சோறிடுதல் வேண்டும் இங்கு வாழும் மக்களுக்கெல்லாம் என்று பாடிய பாரதியின் கூற்றைப் போன்று, அதனை வாழும்போதும், வாழ்ந்த காலத்திற்கு பிறகும் மேற்கொண்டு வரும் வள்ளலாராகவும், பசியைப் போக்கும் திட்டங்களை பள்ளிகளில் சத்துணவாக பகவான் உறையும் ஆயைங்களில் அன்னதானமாக, இல்லங்கள் அனைத்திற்கும் 20 கிலோஅரிசியை விலையில்லாது வழங்கிவரும் அன்னலெட்சுமியாம், முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாமன்றம் நெஞ்சாரப் போற்றி நிறைவுள்ளத்தோடு வாழ்த்துகிறது.
ஏழைஎளிய பாட்டாளி மக்களும், நடுத்தர வர்க்கமும், பெருமளவில் பசியாறி பயனுறும் வண்ணம் சென்னை பெருநகரெங்கும் அனைத்து வார்டுகளிலும், 200 அம்மா மலிவு விலை உணவகங்களை தமது பொற்கரங்களால் தொடங்கி வைத்து பசியெனும் பிணி தமிழகத்தில் எல்லைக்குள்அறவே இல்லை என்பதை தலைநகர் சென்னையின் வாயிலாக இத்தரணிக்கே எடுத்துரைத்து வரலாற்றில் யுக புரட்சி வடித்திருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாமன்றம் களிப்போடு பாராட்டுகிறது.
நாடெங்கும், வாட்டி வதைக்கும் வறட்சி ஒரு பக்கம், வான்மழை பொய்த்ததால் அல்லல் உறும் உழவுத் தொழில் மறுபக்கம், பெட்ரோல், டீசல், எரிவாயு, ரயில்வே பயணக்கட்டணம் மற்றும் சரக்குக் கட்டணம் என மத்திய அரசின், தொடர்ந்த விலையேற்றங்களால் நடுத்தர ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டு வரும் இன்னல்களை, வாழ்க்கை போராட்டங்களை கனிவோடு கருத்தில் கொண்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்விலிருந்து அடித்தட்டு மக்ளை காப்பாற்றும் நோக்கோடு, அமுதம் கூட்டுறவு உணவுப்பொருள் வினியோக அங்காடிகளில் தரமான அரசி ஒரு கிலோ ரூ.20டி க்கு வழங்கிட ஆணையிட்டிருக்கும் அம்மா அவர்களை இல்லங்கள் அனைத்தும் உள்ளம் குளிர வாழ்த்துகின்றன.
அந்த வாழ்த்தொலிகளோடு இந்த மாமன்ற உறுப்பினர்களின் கரவொலிகளும் நன்றிப் பெருக்கோடு கைகோர்க்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்பதை தன் வாழ்வியல் அரிச்சுவடியாய் கொண்டு பற்றற்ற துறவியாய், தூய தொண்டுள்ளத்தோடு பொது வாழ்க்கை புனிதத்துக்கு இலக்கணமாக துருதுருத்த பணிகளால் தூங்காத விழிகள் கொண்டு தமிழகத்தை வழிநடத்தியும், தாய்நாட்டில் தமிழ் நாட்டை தலைநாடாய் ஆக்குவதற்கு தன்னை மெய் வருத்தி உழைக்கும் நம் அன்னைத் திருமகளாம் முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாமன்றம் நெஞ்சாரப் போற்றி நிறைவுள்ளத்தோடு பாராட்டி வாழ்த்துகிறது.
அம்மாவின் லட்சியங்கள் அனைத்திற்கும் உறுதுணையாய் நின்று, முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாத தடத்தில் தூய்மையோடு பணியாற்றிட, சென்னை பெருநகர மாநகராட்சி உளமாற உறுதி ஏற்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.