முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி கடற்படை வீரர்கள் வழக்கு: சுப்ரீம் கோர்ட் அனுமதி

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 27 - இத்தாலி கடற்படை வீரர்கள் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட் அனுமதித்துள்ளது. அரபிக் கடலில் மீன் பிடித்த 2 கேரள மீனவர்கள் இத்தாலியில் இருந்து வந்து கடற்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 2 இத்தாலியர்கள் டெல்லியில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு பற்றி தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இதை எதிர்த்து இத்தாலி அரசு டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தது. அதனை சுப்ரீம் கோர்ட் நேற்று நிராகரித்தது. 

அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

இந்திய மீனவர்களை இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்ற வழக்கை சி.பிஐ. விசாரிப்பதா? தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிப்பதா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும். எனவே தேசிய புலனாய்வு அமைப்பு தொடர்ந்து வழக்கை விசாரிக்கலாம். இதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு தினந்தோறும் விசாரணை நடத்தப்படும். இந்த கோர்ட்டில் வேறு எந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. வழக்கு விசாரணையில் இத்தாலிய அரசுக்கு ஏதேனும் குறைபாடு தெரிந்தால் அது குறித்து முறையீடு செய்யலாம். இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்