முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் குண்டு வெடித்ததில் 16 பேர் பலி

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், ஏப்ரல்.30 - ஈராக்கில், இரு நகரங்களில் காரில் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் பலர் காயமடைந்தனர் என்று செய்திகள் தெரிவித்தன. இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாக்தாதிலிருந்து 320 கி.மீ. தொலைவில் உள்ள அமரா நகரில் 

கட்டிடத் தொழிலாளர்ககள் கூடியிருந்த இடத்திலும், மார்க்கெட் பகுதியிலும் இரு கார்களில் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 9 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். திவானியா என்ற இடத்தில் காரில் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். திவானியா என்ற இடம் பாக்தாலிருந்து 130 கி.மீ. தூரத்தில் உள்ளது. 

16 பேர் இறந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர். குண்டு வைத்தவர் யார் என்பது தெரியவில்லை. மேலும் இதுபற்றி நாங்கள் எந்தத் தகவலும் தருவதற்கு எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்