முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மாவுக்கு நடந்த அறுவை சிகிச்சை: அமைச்சர் நெகிழ்ச்சி

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.30 - என் அம்மாவுக்கு அரசு மருத்துவமனையில்தான் அறுவை சிகிச்சை நடைபெற்றது என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில், தே.மு.தி.க. உறுப்பினர் வெங்கடேசன், அரசு மருத்துவமனைகளின் நிலை குறித்து பேசினார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் கூறியதாவது:-

எனது அம்மாவுக்கு கடந்த 30 ஆண்டுகளாக கழுத்தில் கட்டி ஒன்று உள்ளது. அவர்கள் கிராமத்தில்தான் வாழ்ந்து வந்தார்கள்.

தற்போது நான், என்னுடன் இங்கு வந்து தங்கி விடுங்கள் என்று கூறி, சென்னைக்கு அழைத்து வந்துவிட்டேன்.

எனது அம்மா சாப்பிடும் போதெல்லாம், அந்தக்கட்டி இருப்பதால் வலிக்கும். தற்போது முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்து, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளாக இருந்த கட்டி, அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு, தற்போது எனது அம்மா நலமாக வாழ்கிறார் என்று அமைச்சர் பி.பழனியப்பன் பேரவையில் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்