முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி பேரன் மீது தாய் போலீஸில் புகார்

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.30 - கருணாநிதி பேரன் மீது அவரது தாய் நேற்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். சென்னை கானத்தூர் சத்யசாய் அவென்யூவில் வசிப்பவர் சிவகாமசுந்தரி, கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மனைவி இவர். நேற்று அவர் ஷேர் ஆட்டோவில் எழும்பூர் வந்து இறங்கி தள்ளாடியபடியே போலீஸ் கமிஷனர் அபிஸிற்குள் நடந்து சென்றார்.

சிவகாமசுந்தரி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்று அளித்தார். அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது தந்தை பிரபல பின்னணி பாடகர் சிதம்பரம் ஜெயராமன் என் கணவர் மு.க.முத்து, எனக்கு 65 வயது அகிறது. எனக்கு 2 முறை அறுவை சிகிச்சை செய்து உள்ளேன் உடல் நிலை பாதிப்பு காரணமாக சிரமப்பட்டு வருகிறேன். எனது மகன் மு.க.மு.அறிவுநிதி, அவரது மனைவி பூங்கொடி, அவரது மாமியார் யோக மங்களம் ஆகியோர் என்னிடம் பணம், சொத்து கேட்டு தொல்லை கொடுத்து வருகிறார்கள்.

ஆட்களை வைத்து மிரட்டி சொத்துக்களை பறிக்கப்போவதாக பயமுறுத்தி வருகிறார்கள். என்னிடம் அடிக்கடி தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டி வருகிறார்கள். எனது பெயரில் சென்னை கோபாலபுரத்தில் சொந்தவீடு உள்ளது அந்த வீட்டை விட்டு என்னையும், என் கணவரையும் விரட்டி விட்டனர். தற்போது அந்த வீட்டை வாடகைக்கு விட்டு அந்த பணத்தை அனுபவித்து வருகின்றனர். நாங்கள் கானாத்தூரில் தனியாக வசித்து வருகிறோம். அடிக்கடி மிரட்டுவதால் எனக்கு மன உனச்சல் ஏற்பட்டுள்ளது.

எனக்கு பாதுகாப்பு இல்லை, எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். என்னை மிரட்டும் மகன், அவரது மனைவி பூங்கொடி, மகனின் மாமியார் யோக மங்களம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சிவகாமசுந்தரி மனுவில் கூறியுள்ளார்.அவர் புகாரின் மீது விசாரணை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்