முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.கல்லுப்பட்டி புதுமாரியம்மன் கோவிலில் மாறுவேடதிருவிழா

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

திருமங்கலம்.மே. - 1 - டி.கல்லுப்பட்டி புதுமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறுவிதமான மாறுவேடங்களில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். திருமங்கலம் அருகேயுள்ள டி.கல்லுப்பட்டி, மெயின்ரோட்டில் 300ஆண்டுகால பழமைவாய்ந்த புதுமாரியம்மன் கோவில் உள்ளது.இங்கு ஆண்டுதோறும் சித்திரைதிருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.இந்நிலையில் புதுமாரியம்மன்கோவிலின் சித்திரை திருவிழா நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவின் முக்கியநிகழ்வாக பக்தர்கள் பல்வேறுவேடங்களில் ஆடிப்பாடி மகிழ்ந்து நேர்த்திக்கடன் செலுத்திடும் முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது டி.கல்லுப்பட்டியின் சுற்றுப்புற 48கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேவலோக கடவுளர்கள்,பழங்கால அரசர்கள்,ராட்சதர்கள்,பேய்,பிசாசுகள்,அரக்கிகள்,பிச்சைக்காரர்கள்,விபத்தில் கிடக்கும் பிணங்கள்,வெளிநாட்டு இன்னிசை குழுவினர் மற்றும் பெண்கள் போன்று வேடமிட்டு அலங்காரவண்டிகளில் ஊர்வலமாக வந்து கோவிலையடைந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். இதையடுத்து மாட்டுவண்டியில் சீர்வரிசை சாமான்கள் ஏற்றப்பட்டு புதுப்பொண்ணு மாப்பிள்ளை வண்டி ஊர்வலம் அலங்கார வண்டிகளில் கடவுளர்கள் பின்தொடர கோவிலை வந்தடைந்தது.அதன்பின்னர் கோவிலில் வேண்டுதல் நிறைவேறிய 500க்கும் மேற்பட்டோர் புக்ைகுழி இறங்கி சாமிதரிசனம் செய்தனர்.பிறகு ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபாடுநடத்தினர்.தசரா திருவிழா போல் நடைபெற்ற இந்த புதுமையான புதுமாரியம்மன் கோவில்விழாவில் தமிழகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு மாறுவேடங்களை ரசித்ததுடன் வழிபாடும் நடத்திச் சென்றனர். திருவிழாவின்போது டி.கல்லுப்பட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்