எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புனே: மே, - 2 - புனேவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கேப்டன் டோணி மிகச் சிறப்பாக விளையாடி 16 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. முதலில் பேட் செய்த சென்னை அணி துவக்கத்திலேயே ஹஸ்ஸியின் விக்கெட்டை இழந்தது. ரிச்சர்ட்சனின் பந்துவீந்தில் 5 ரன்களுடன் மைக்கேல் ஹஸ்ஸி அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய சாகா, ரெய்னாவுடன் இணைந்து விளையாடினார். சர்மாவின் பந்துவீச்சில் சாகா 13 ரன்களுடன் எல்பிடபிள்யூ ஆகி அவுட் ஆனார். இதையடுத்து ரெய்னாவுடன் பத்ரிநாத் இணைந்தார். இந்தக் கூட்டணி மிகச் சிறப்பாக பேட் செய்தது. 34 ரன்கள் எடுத்த நிலையில் பத்ரிநாத், ரைட்டின் பந்துவீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார். இதையடுத்து களமிறங்கிய டோணி சந்தித்த முதல் பந்தையே பவுண்ட்ரிக்கு அடித்தார். அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்தார். ரெய்னாவுடன் இணைந்து டோணி மிகச் சிறப்பாக விளையாடினார். அவர் 16 பந்துகளில் 45 ரன்கள் அடித்தார். ரெய்னா அவுட் ஆகாமல் 63 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 164 ரன்களை எடுத்து ஆட்டத்தை முடித்தது. குறிப்பாக டோணியின் ஆட்டம் தான் சென்னை அணியை கொஞ்சமாவது பைட்டிங் ஸ்கோருக்குக் கொண்டு சென்றது. மிகுந்த திணறலுடன் ஆரம்பித்த சென்னை அணி ஒருவழியாக 164 ரன்களை எட்டியது. புனே வாரியர்ஸ் அணியில் திண்டாவும் ரிச்சர்ட்சனும் மிக அதிகமான ரன்களைக் கொடுத்தனர். சர்மா 4 ஓவர்களில் 27 ரன்களைத் தந்து ஒரு விக்கெட்டை (சாகா) வீழ்த்தினார். புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில் 24 ரன்கள் தந்தார். ரிச்சர்ட்சன் 4 ஓவர்களில் 35 ரன்களுக்கு ஒரு விக்கெட் (ஹஸ்ஸி) எடுத்தார். திண்டா 4 ஓவர்களில் 41 ரன்களை அள்ளித் தந்து சென்னை ரசிகர்களின் மனதை ாகொள்ளையடித்தார்ா. அதே போல ஏ.எம்.நாயர் 3 ஓவர்களிலேயே 23 ரன்களைத் தந்தார். ரைட் ஒரே ஓவரில் 12 ரன்கள் தந்து பத்ரிநாத்தின் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து பேட்டிங் செய்த புனே வாரியர்ஸ் முதல் 2 ஓவர்களிலேயே 25 ரன்களைத் தாண்டியது. ஆனால், அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன. பின்ச் மோகித் சர்மாவின் பவுலிங்கில் டோணியிடம் கேட்ச் ஆனார். சுமன், மோகித் சர்மாவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். அதே போல உத்தப்பாவை ரெய்னா அட்டகாசமான ரன் அவுட் ஆக்கினார். இதையடுத்து களமிறங்கிய யுவராஜ் சிங் மோகித் சர்மாவின் பந்துவீச்சில் டோணியிடம் கேட்ச் ஆனார். அவர் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந் நிலையில் 5வது விக்கெட்டையும் இழந்தது புனே வாரியர்ஸ். மோர்க்கலின் பந்துவீச்சில் ஸ்மித் அடித்த பந்து எதிர் தரப்பில் விக்கெட்டுகளை சாய்க்க லூக் ரைட் ரன்-அவுட் ஆனார் இதனால் 54 ரன்கள் எடுத்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது புனே வாரியர்ஸ். இந் நிலையில் அபிஷேன் நாயர் ரன் அவுட் ஆனார். ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே கொஞ்சம் நின்று நிதானமாக விளையாடினார். ஆனால், ஜடேஜாவின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆகி அவுட் ஆனார் ஸ்மித். இதையடுத்து ரிச்சர்ட்சனுடன் புவனேஷ்குமார் இணைந்தார். ஆனால், ரிச்சர்ட்சன் பந்துகளை அடிக்க, குமார் பந்துகளை அடிக்க முடியாமல் திணறினார். ஆனால், ஜடேஜாவின் பந்துவீச்சில் திக்கித்திணறி ஒரு பவுன்ட்ரியை அடித்த அவர் அடுத்ததாக ஒரு சிக்ஸரையும் அடித்தார். 19வது ஓவரில் மோரிசின் பந்துவீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் ஆனார் ரிச்சர்ட்ஸ்சன். அவர் 26 ரன்கள் எடுத்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் புனே வாரியர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களையே எடுக்க முடிந்தது. இதன்மூலம் அந்த அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. மொத்தத்தில் ஆரம்பத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் தடுமாறினாலும் டோணியின் பேட்டிங்கால் நிமிர்ந்தது. இதையடுத்து மிகச் சிறப்பான பந்துவீச்சு மற்றும் பீல்டிங் காரணமாக புனே வாரியர்ஸை எளிதாகவே சுருட்டியது. புனே அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகயில் 2ல் மட்டும் வென்று, 7ல் தோற்றுள்ளது. இந்தப் போட்டி உள்பட மீதமுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே, அடுத்த சுற்று குறித்து யோசிக்க முடியும். ஐபிஎல் வரலாற்றில் சென்னை, புனே அணிகள் இதுவரை மொத்தம் 5 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 3 ல் சென்னை வென்றது. 2ல் புனே வெற்றிபெற்றது. புனே மைதானத்தில் இவ்விரு அணிகள் மோதிய 2 போட்டிகளில், சென்னை, புனே அணிகள் தலா ஒரு வெற்றி பெற்றன. இன்றைய போட்டியில் சென்னை அணி வென்றுள்ளது. ஏற்கனவே தங்களை தோற்கடித்த புனே அணியை வென்று பழி தீர்த்துக் கொண்டது டோணி தலைமையிலான சென்னை அணி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.