முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரத்னகுமார் இயக்கத்தில் ``செங்காத்து பூமியிலே''

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்ரல்,29 - சுவாமிசினி ஆர்ட்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு செங்காத்து பூமியிலே என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் பவான், மிரச்சி செந்தில், கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.  மற்றும் சிங்கபுலி, அழகன் தமிழ்மணி, வெள்ளபாண்டி, ஸ்டாலின், டி.கே.கலா, அஞ்சலி தேவி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் படத்தில் என்கிறார் இயக்குனர் ரத்னகுமார்.

ஒளிப்பதிவு கார்த்திக் ராஜா, இசை இளையராஜா, பாடல்கள் சினேகன், இளையராஜா, கலை ஏ.ஆனந்த், நடனம் ராக்சங்கர், ஸ்டன்ட் ஜாக்குவார் தங்கம், எடிட்டிங் கே.என்.கே.பழனிவேல், தயாரிப்பு நிர்வாகம், சாமி, தயாரிப்பு மேற்பார்வை துரைமுருகன், இணை தயாரிப்பு லஷ்மிரத்னகுமார். தயாரிப்பு ரேவதி துரைமுருகன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.ரத்னகுமார். இவர் தேசிய விருதுகளை பெற்ற கிழக்கு சீமையிலே, கடல்பூக்கள், கருத்தம்மா போன்ற படங்களின் கதை, வசனகர்த்தா. சத்யராஜ் நடித்த சேனாதிபதி என்ற படத்தை இயக்கியவர்.

மதுரை, தேனி, மாவட்டங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது. இப்படம் பற்றி இயக்குனர் ரத்னகுமாரிடம் பேசினோம். இயந்திரத்தனமான மனித வாழ்க்கையில் இன்று உணர்வுகளுக்கு மதிப்பு குறைந்து கொண்டிருக்கிறது.பண உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிற உலகில் மண உணர்வுகளை  பதிவு செய்கிற பதிவு தான் செங்காத்து பூமியிலே. வறண்ட போன பூமியில் கூட இன்னும் வற்றி போகாத மனித உறவுகள், அவர்களின் உணர்வுகளை யதார்த்தமாக பதிவு செய்கிற, செய்த பதிவு தான் செங்காத்து பூமியிலே. படத்தை பார்த்த நிறைய பேர் ரொம்ப நல்ல படம் என்று மனதார பாராட்டினார்கள். இளையராஜா படத்தை பார்த்துவிட்டு அப்படியே கண்ணீர் சந்தி அருமையான பதிவு என்று பாராட்டினார். நிச்சயம் படத்தை பார்க்கிற அனைவருக்கும் அந்த உணர்வு ஏற்படும் என்றார் ரத்னகுமார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்