எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஏப்.28 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஆ.ராசாவுக்கு பாராளுமன்ற பொதுகணக்குக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக தி.மு.க. வை சேர்ந்த ராஜா, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை முறைகேடான வகையில் ஏலம் விட்டு ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளார். சிறு சிறு தகவல் தொடர்பு கம்பெனிகள் மற்றும் வெறும் பெயரளவில் உள்ள நிறுவனங்களுக்கை அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததில் ரூ. 3 ஆயிரம் கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பணத்தை பினாமி பெயரில் ரியல் எஸ்டேட் தொழிலிலும் தனது மனைவி பெயரில் துபாய் உள்பட அரபு நாடுகளில் உள்ள வங்கிகளிலும் இதர தொழிலதிபர்கள் மூலமாகவும் முதலீடு செய்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் குறித்து சுப்ரீம்கோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி இரண்டு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. அதில் ஆ.ராசா, மத்திய தொலைதொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெஹூரா, ராசாவின் தனி செயலாளராக இருந்த சந்தோலியா, ஸ்வான் கம்பெனி புரமோட்டர் பல்வா, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்பட 10-க்கும் மேற்பட்டவர்களும் பல கம்பெனிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. மற்றொரு பக்கம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பாரதிய ஜனதா தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பாராளுமன்ற பொதுகணக்குக்குழுவும் பாராளுமன்ற கூட்டுக்குழுவும் விசாரணை நடத்தி வருகின்றன. ஆக ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து மும்முனை விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடத்திய பாராளுமன்ற பொதுகணக்குக்குழு வரைவு அறிக்கையை மிகப்பெரிய அளவில் தயாரித்துள்ளது. அந்த அறிக்கையின் நகல் குழுவில் உள்ள உறுப்பினர்களின் ஆய்வுக்கு விடப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் கண்டனத்திற்கு குழுவில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கலாம். பொதுகணக்குக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் முன்னிலையில் விவாதத்திற்கு வைக்கப்படுகிறது. இந்த அறிக்கையில் ஆ.ராசா மீது கடுமையாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம், ப.சிதம்பரத்திற்கும் அறிக்கையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் மத்திய கேபினட் செயலாளருக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஏலம் விடுவதில் சரியான நடவடிக்கையை பிரதமர் அலுவலகம் எடுக்கவில்லை என்பதோடு பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்த விஷயத்தை ஓரம் கட்டியதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஏல முறைகேடு விவகாரத்தை எழுப்பி,சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் அப்படியே முடித்துவிடும்படி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு சிபாரிசு செய்ததாக கூறப்படும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதும் குழு கடுமையாக தாக்கியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டதில் பிரதமர் அலுவலகம் தலையிடாமல் ஒதுங்கிக்கொண்டது. இதனால் ஸ்பெக்ட்ரத்தை ஆ.ராசா தன்னிச்சையாகவும், நியாயமற்ற முறையிலும் விதிமுறைகளை மாற்றி முறைகேடான வகையில் ஏலம் விடுவதற்கு பெரும் உதவியாகப்போய்விட்டது. ஸ்பெக்ட்ரம் ஏலம் விடுவதில் தலையிடாமல் ஒதுங்கி இருக்கும்படி கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி தன்னுடைய அலுவலகத்தை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதனால் ஸ்பெக்ட்ரம் ஏலம் விஷயத்தில் பிரதமர் அலுவலகம் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்துள்ளது. முறைகேட்டை தடுக்க எந்தவித நடவடிக்கையையும் எடுக்க முயற்சிக்கவில்லை. இது ராசாவுக்கு கொடுக்கப்பட்ட மறைமுக அனுமதியாகும். இதை பயன்படுத்தி ராசா தனது இஷ்டம்போல் கமிஷனும் லஞ்சமும் வாங்கிக்கொண்டு ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டுள்ளார் என்றும் அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி ஸ்பெக்ட்ரம் ஏலத்தை ராசா விட்டுள்ளார். மேலும் தொலைதொடர்புத்துறை முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி தொடர்பாக கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆ.ராசாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தை ராசா புறக்கணித்தது பெரும் கவலையை அளிக்கிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடுவதுபற்றி பரிசீலனைதான் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஏலம் விடுவதற்கு தொலைதொடர்பு கமிஷனும் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் சிபாரிசு செய்யவில்லை என்ற பிரதமர் மன்மோகன் சிங் சொல்லியும் அதை ராசா கேட்காமல் பிரதமருக்கு தவறான வழியை காட்டியுள்ளார். மேலும் உண்மையில் பாதியை கூறியும் பாதியை மறைத்தும் ராசா கூறியுள்ளார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்து சட்ட அமைச்சகமானது அதிகாரம் உள்ள அமைச்சர்கள் குழுவை அமைக்க வேண்டும் என்று கூறவில்லை என்று குழுவுக்கு பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பது நம்பகத்தனமாக இல்லை. சட்ட அமைச்சகம் கூறிய ஆலோசனைகள் பிரதமர் அலுவலகத்திற்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆனால் தகவல்தொடர்பு அமைச்சர் அதை மீறி செயல்பட்டதால் அதிகாரம் உள்ள கேபினட் அமைச்சர்கள் குழுவை பிரதமர் அலுவலகத்தால் அமைக்க முடியவில்லை என்று அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை குறித்து ஆய்வு செய்ய பொதுக்கணக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.