முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் பாஜக தொண்டர்கள் முற்றுகை போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மே.13 - பிரதமர் மன்மோகன்சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி டெல்லி ரேஸ்தோர்ஸ் சாலையில்  உள்ள பிரதமர் வீட்டு முன்பு பாஜக இளைஞர் அணியைச் சேர்ந்த தொண்டர்கள் நூற்றுகணக்கானோர்  முற்றுகைப் போராட்டம் நடத்தினர். 

மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையிலிருந்து பவன்குமார் பன்சால், அஸ்வனிகுமார் ஆகியோர் ஊழல் காரணமாக தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். எனவே பிரதமரும் தார்மிக அடிப்படையில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதில் உணர்ச்சிவசப்பட்ட சில தொண்டர்கள் மன்மோகன்சிங்கின் உருவ பொம்மையை அவரது வீட்டுக்கு அருகில் தீவைத்துக் கொளுத்தினர்.

பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த இரு தடைகளை உடைத்துச் செல்ல முயற்சித்தனர். அப்போது போலீஸார் தண்ணீரைப் பீச்சி அவர்களை கலைந்து போகுமாறு செய்தனர். இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

பிரதமர் மன்மோகன்சிங் வீடு அருகே முறையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய டெல்லியில் உள்ள 7 ரேஸ்கோர்ஸ் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் 4 பேருக்கு மேல் கூடுவது கூடாது என்பது உள்ளிட்ட 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் மறு உத்தரவு வரும் வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் எவரும் போகாத வகையில் அந்த பகுதி மூடப்பட்டுள்ளது என்றும் அந்த உயர் போலீஸ் அதிகாரி கூறினார். இந்த அமைச்சர்களின் ஊழலை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடும்போராட்டம் நடத்தின. பாராளுமன்றம் முடங்கியது. வேறு வழி இல்லாமல் இந்த அமைச்சர்கள் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

ரயில்வேயில் உயர் பதவிக்கு ஆள் நியமனம் செய்வது தொடர்பாக பன்சாலின் மருமகன் லஞ்சம் வாங்கியது நிரூபணமானது. பன்சாலின் மருமகன் லஞ்சம் வாங்கியதை சிபிஐ அதிகாரிகள் கையும், களவுமாகப் பிடித்தனர். எனவே பன்சால் ராஜினாமா செய்தார். இதேபோல் நிலக்கரி ஊழலில் சம்பந்தப்பட்டதால் அஸ்வனி குமார் ராஜினாமா செய்ய நேரிட்டது. இதை அடுத்து பிரதமர் மன்மோகன்சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி பாஜகவினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். 

இந்த முற்றுகை போராட்டத்தின் போது சிலர் போலீஸாருடன் மோதினர். முற்றுகை போராட்டம் நடத்தியவர்களில் தாகூர், டெல்லி பாஜக தலைவர் விஜய் கோயல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago