முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை

செவ்வாய்க்கிழமை, 14 மே 2013      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, மே.15 ​- உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில், வயல் பகுதியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சிறுமியின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி  விசாரித்து வருகின்றனர். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் பற்றி போலீஸ் ஐ.ஜி. சுபாஷ் சந்திரா கூறியதாவது;  பீகாரைச் சேர்ந்த பெற்றோர் செங்கல் தொழிற்சாலையில்  கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களது மகளான இந்த சிறுமி, பரங்கி மாவட்டத்தில் உள்ள சிக்சோதி கிராமத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியை காண்பதற்காகச் சென்றார். இந்த சிறுமி சென்றவள்  சென்றவள்தான். பின்னர் வீடு திரும்பவில்லை. 

இதை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் பதறி துடித்தனர். நமது மகள் உயிருடன் வீட்டுக்குத்  திரும்பி வரமாட்டாளா என்று அச்சிறுமியின் பெற்றோர் ஏங்கித் தவித்தனர். அவளைக் காணாமல் அலறித் துடித்தனர்.

    இதற்கிடையே இந்த சிறுமியைப் பற்றி ஒரு தகவல் கிடைத்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் தங்களது அன்புச் செல்வத்தை காண ஓடோடிச் சென்றனர். ஆனால் அவர்கள் கண்ட காட்சி அவர்களை நிலைகுலையச் செய்தது. ஆம். அந்த சிறுமி வயல்வெளியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைப் பார்த்து, கதறி துடித்து கண்ணீர் சிந்திய இச்சிறுமியின் பெற்றோர் இதுபற்றி போலீஸாரிடம் புகார் செய்யலாம் என்று திட்டமிட்டனர். இது  சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட  வழக்காகும் என்றும் சுபாஷ் சந்திரா கூறினார்.

சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே நாங்கள் உண்மை குற்றவாளியைக் கண்டறியும் விதமாக அந்த கிராமத்தில் சந்தேகப்படும் விதமாக அலைந்து திரிபவர்களை  கண்டுபிடித்து கைது செய்ய முயற்சித்து வருகிறோம் என்றும் சந்திரா கூறினார்.     

யாரோ செய்த மிகப் பெரிய தவறால் பெற்றோர், தங்களது  அருமை மகளை இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை. இனிமேல் இவர்களின் கதி....?

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்