முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்சியில் பங்கு - சோனியா முடிவு செய்வாராம் - வாசன்

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

புதுக்கோட்டை,பிப்.22 - ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து கட்சித் தலைவர் சோனியா காந்திதான் முடிவு செய்வார் என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டியில் கடந்த 2004 ல் தொடங்கி மக்களவை தேர்தல் சட்டப்பேரவை தேர்தல் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்கள் என பல தேர்தல்களை வெற்றிகரமாக சந்தித்து வரும் கூட்டணி தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிதான். 

கட்சியில் அகில இந்திய தலைமை மற்றும் மாநில தலைமை எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில்தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் ஊகங்களுக்கே இடமில்லை. தமிழகத்தில் ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்பதா, இல்லையா என்பதை கட்சித் தலைவர் சோனியாதான் முடிவு செய்வார். தமிழகத்தை கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்த தி.மு.க. தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி பல்வேறு வகையான நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. இதைத்தான் எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய பலமாக கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்