முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே. ம. உ. ஆணைய தலைவராக ஜோசப்பை நியமிக்க எதிர்ப்பு

வெள்ளிக்கிழமை, 17 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மே. 18  - தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஜோசப்பை நியமிக்க பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் பெரும்பான்மை அடிப்படையில் நீதிபதி ஜோசப்பையே ஆணையத்தின் தலைவராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த நீதிபதி மாத்தூர் ஜனவரி மாதம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அந்தப் பதவி காலியாக இருந்தது. இந்த பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து ஆலோசிக்க பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி, சபாநாயகர் மீரா குமார், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே. குரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் நீதிபதி ஜோசப்பை நியமிக்க சுஷ்மா ஸ்வராஜூம், அருண் ஜெட்லியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் பெரும்பான்மை உறுப்பினர்கள் முடிவின் அடிப்படையில் நீதிபதி ஜோசப்பையே மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்