முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை

சனிக்கிழமை, 18 மே 2013      உலகம்
Image Unavailable

 

புகுசிமா, மே. 19  - ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானில் புகுசிமா கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலை பயங்கர நில நடுக்கம் உணரப்பட்டது. தலைநகர் டோக்கியோவில் இருந்து 200 மைல் தொலைவில் நேர்ந்த இந்த நிலநடுக்கத்திற்கு கட்டிடங்கள் குலுங்கின. அதே போல் பசுபிக் கடற்பகுதியில் 50 மைல் ஆழத்தில் நேர்ந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

கடந்த 2011 ம் ஆண்டு மார்ச் மாதம் இதே பகுதியில் 9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி அலைகள் உருவானது. இதனால் 16,000 பேர் உயிரிழந்தனர். பல கோடி ரூபாய் சொத்துக்கள் சேதமடைந்தன. புகுசிமா அணு உலையும் பாதிப்பிற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்