முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் சோனியாவின் புகழ் மங்கிவிட்டது - நடிகை ரோஜா

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

நகரி, பிப்.22 - ராஜசேகர ரெட்டி மறைவிற்கு பிறகு ஆந்திராவில் சோனியாவின் புகழ் மங்கிவிட்டது என்று நடிகை ரோஜா குறிப்பிட்டார்.

ஆந்திராவில் மாமவரகளுக்கு கல்வி கட்டணம் வழங்கக்கோரி ஜெகன்மோகன் ரெட்டி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அப்போது நடிகை ரோஜா பேசியதாவது, ஆந்திராவில் ராஜசேகரரெட்டி முதல்வராக இருந்த போது சோனியாவிற்கு நல்ல புகழ் இருந்தது. ஆனால் அவரது மரணத்திற்கு பிறகு சோனியா எடுத்த தவறான முடிவுகளால் அவரது செல்வாக்கு அடியோடு சரிந்துவிட்டது. நானும் சோனியாவை மிகப்பெரிய புத்திசாலியான தலைவர் என நினைத்தேன். அவர் ஆந்திர அரசியலில் எடுத்த முடிவுகள் முட்டாள் தனமாக உள்ளது. மக்கல் செல்வாக்கு மிகுந்த ஜெகன்மோகன்ரெட்டியை பதவி விலக செய்து ஆந்திராவில் காங்கிரசை அழித்துவிட்டார். தற்போது ஆந்திர கிராமங்களில் தொண்டர்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மந்திரி பதவியில் உள்ளவர்கள் கூட தேர்தலின் போது ஜெகன் பக்கம் வந்துவிடுவார்கள்.  இனிமேல் சோனியாவால் ஆந்திராவில் செல்வாக்கு பெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்