முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் கட்சி மீது மோடி கடும் தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013      இந்தியா
Image Unavailable

 

ராய்ப்பூர், மே.20 - சத்தீஷ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைய மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி,  சத்தீஷ்கர் மாநில மக்களை கேட்டுக்கொண்டார். ராய்ப்பூரிலிருந்து 73 கி.மீ. தொலைவில் உள்ள காஜ்னந்கான் என்ற இடத்தில் ராமன்சிங்கின் யாத்திரை பேரணியை தொடங்கி வைத்து மோடி பேசியதாவது:

நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் குஜராத மாநிலம் போன்று சத்தீஷ்கர் மாநிலமும் முன்னேறும். இதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். இந்த ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே நீங்கள் ராமன்சிங்குக்கு வாக்களிக்க வேண்டும். அப்படி நீங்கள் வாக்களித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சியில், சத்தீஷ்கர் மாநிலம் குஜராத்தை மிஞ்சிவிடும் என்றார்.

காங்கிரஸ் கட்சியை கடுமையாகத் தாக்கிப் பேசிய அவர். காங்கிரஸ் கட்சி ஆண்டதால்தான் சத்தீஷ்கரில் வறுமை, ஏழ்மை, படிப்பறிவின்மை ஆகியவை நிலைத்து உள்ளன. காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மத்தியபிரதேசத்தைப் பிரித்து  சத்தீஷ்கரை உருவாக்கியபோது இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சிதான் நடந்தது. கடந்த 3 ஆண்டுகளாக இங்கு எந்த வ ளர்ச்சியும் இல்லை. எனழே மக்கள் நன்றாக சிந்தித்து  பாஜகவுககு வாக்களித்து காங்கிரஸ் கட்சியை நிராகரிக்க வேண்டும்.

ராமன்சிங்கை தவிர வேறு எந்த மாநில முதல்வரையும் மோடி இவ்வாறு புகழ்ந்து பேசியதில்லை. ராமன்சிங்குக்கு மோடி தனது பூரண ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்