முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் பிரமுகர்களுக்கு புதிய நினைவு வளாகம்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.20 - தலைநகர் டெல்லியில் முக்கிய பிரமுகர்களுக்கு புதிய நினைவு வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. யமுனை நதிக்கரையில் இந்த புதிய நினைவு வளாகம் ரூ.37 கோடியில் கட்டப்பட உள்ளது. 

டெல்லியில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களுக்கு நினைவகம் சுமார் 245 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. இந்த இடம் போதாதது என்பதை கருத்தில் கொண்டு யமுனை நதிக்கரையில் புதிய நினைவு வளாகம் கட்ட மத்திய கேபினட் அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இதனையொட்டி டெல்லியின் நடுவே ஓடிக்கொண்டியிருக்கும் யமுனை நதிக்கரையில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் முக்கிய பிரமுகர்களுக்கான நினைவு வளாகம் ரூ.37 கோடியில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நினைவு வளாகத்தை மத்திய பொதுப்பணித்துறை கட்டும் என்று டெல்லி நகர வளர்ச்சித்துறை செயலாளர் சுதிர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். டெல்லியில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி,  ராஜீவ் காந்தி மற்றும் முக்கிய தலைவர்களுக்கு வெவ்வேறு பெயரில் நினைவிடங்கள் கட்டப்பட்டிருந்தாலும் அவைகள் அனைத்தும் ஒரே வளாகத்தில்தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்