முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணி தலைவர்களுக்கு சோனியா நாளை விருந்து

திங்கட்கிழமை, 20 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.21 - மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பதவி யேற்று 4 ஆண்டுகள் நிறைவடைவதை தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நாளை சோனியா விருந்தளிக்கிறார். பாராளுமன்ற அடுத்த பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு குறைவான காலமே உள்ள நிலையில் 4 ஆண்டு கால ஆட்சி செயல்பாடு குறித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி கூட்டத்தில் மன்மோகன் சிங் உரையாற்ற இருக்கிறார். எனவே இந்த கூட்டம் தான் 2-ம் கட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இறுதியாண்டு சாதனை விளக்கப்பட்டியலாகும். நாளை நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிக்கிறார். இரு முக்கிய கூட்டணி கட்சிகளான தி.மு.க. ,திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை கூட்டணியிலிருந்து  வெளியேறிவிட்டதால் அந்த கட்சி தலைவர்கள் இந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார்கள். 

தொடந்து வெளியான புகார்கள் சமீபத்தில் பவன்குமார் பன்சால், அஸ்வினிகுமார், ஆகிய கேபினட் மந்திரிகளும் பதவி விலகல் போன்ற நிகழ்வுகள் காரணமாக அனைவருக்கும் திருப்தி அளிக்கும் ஆக்கபூர்வமான ஒரு சாதனை அறிக்கையை வெளியிடுவது பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அவ்வளவு எளிதான காரியமல்ல. பொது வினியோகத்திட்டத்தில் வழங்கப்படும் மானியங்களை மக்களை நேரடியாக போய்ச்சேர வகை செய்யும்''உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம்'' சில்லரை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு அனுமதி போன்ற திட்டங்கள் சாதனைப்பட்டியலில் முதலிடம் வகிக்கும் என்று தெரிகிறது. 

அடுத்த தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி மிகவும் நம்பி இருந்த உணவு பாதுகாப்பு சட்டமசோதா, மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கான  நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் மன்மோகன் சிங் அறிவிப்பார் என்று தெரிகிறது. இருமத்திய மந்திரிகள் பதவி விலகல் பிரச்சனையில் சோனியாவுக்கும், பிரதமருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியான தகவலை காங்கிரஸ் கட்சி மறுத்து வருகிறது இந்த விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தனது ஆதரவை உறுதிப்படுத்துவார் என்றும் கருதப்படுகிறது. அதே நேரத்தில் ஐக்கிய முற்போக்குகூட்டணி அரசின் 2-ம் கட்ட அரசு சுதந்திர இந்தியாவில் மிகவும் பலவீனமான அரசு என்றும் அனைத்து துறையிலும் தோல்வியை தழுவிய அரசு என்றும் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிராகாஷ்ஜவடேகர் கருத்து தெரிவித்திருக்கிறார், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் சீத்தாராம்எச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோர் மிக முக்கிய மான தேர்தல் வாக்குறுதிகளான பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, லோக்பால் மசோதா, நீத்தித்துறைபொறுப்புடைமை சட்டமசோதா போன்றவை நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்கள். அரசியல் அமைப்பின் அதிகாரம் கொண்ட அமைப்புகளை அழித்துவருவதாகவும் ,சிபிஐ யை சீர்குலைத்து வருவதாகவும் நீதித்துறை நடவடிக்கைகளிலும் தடங்கலை ஏற்படுத்தி வருவதாகவும் மத்திய அரசின் மீது பா.ஜ.க. குற்றம் சாட்டிவருகிறது.

எதிர்கொள்ள சவால்கள் அதிகம் இருந்தபோதிலும் மணிசங்கரய்யர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் அடுத்த தேர்தலை அச்சமின்றி எதிர்கொள்ளமுடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சுதந்திர இந்தியாவில் எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமாக இருப்பதுதான் நமக்கு சாதகமான அம்சம் என்று கூறிய மணிசங்கரய்யர் முதலில் உத்திராகாண்ட் பின்னர் இமாசலப்பிரதேசம், தற்போது கர்நாடகம் ஆகிய  மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வீழ்த்தப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி பிளவு பட்ட எதிர்க்கட்சிகளால்தேர்தலில் நாம் பயப்படதேவையில்லை என்று கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்