முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-சீனா இடையே 2 ஒப்பந்தங்கள் கையெழுத்து

திங்கட்கிழமை, 20 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.21 - இந்தியா-சீனா இடையே பிரமபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டுதல், விசா, வர்த்தகம்  மற்றும் இதர துறைகள் தொடர்பாக 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. சீனாவின் புதிய பிரதமர் லீ கெகியாங் 3 நாள் அரசு பயணமாக நேற்றுமுன்தினம் மாலையில் புதுடெல்லி வந்துள்ளார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. வரவேற்புக்கு பின்னர் சீன பிரதமரும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்தித்து பேசினர். சந்திப்புக்கு முன்னர் லீ கெகியாங்கிற்கு மன்மோகன் சிங் விருந்து அளித்தார். நேற்று பிரதமர் மன்மோகன் சிங், லீ கெகியாங் தலைமையில் இருநாட்டு உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது பிரமபுத்திரா நதியின் குறுக்கே அணைகட்டுதல், விசா, வர்த்தகம், கடல் வர்த்தகம், உணவுப்பொருட்கள் உள்பட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் இரண்டு பிரதமர்களும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது இந்தியா-சீனா இடையே நீண்டகாலமாக உள்ள எல்லைப்பிரச்சினைக்கு தீர்வுகாண தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்  என்று சீன பிரதமர் லீ கெகியான் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். சீனாவுடன் பல்வேறு பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதேசமயத்தில் இருநாட்டு எல்லைப்பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்றார். இருநாடுகளிடையே நம்பிக்கையை உருவாக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எல்லைப்பிரச்சினைக்கு நியாயமாகவும் இருதரப்பினரும் ஒத்துக்கொள்ளும் வகையிலும் எல்லைப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும். இதுதொடர்பான பேச்சுவார்த்தையை சம்மந்தப்பட்ட இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்துவார்கள் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். 

இந்தியா-சீனா இடையே எல்லைப்பிரச்சினை வரலாற்றுப்பூர்வமாக தீர்க்கப்படாமல் இருக்கிறது. இதற்கு தீர்வுகான இருநாடுகளும் ஆர்வமாக இருக்கின்றன என்று சீன பிரதமர் லீ கெகியாங் கூறினார். எல்லைப்பிரச்சினைக்கு தீர்வுகான அமைக்கப்பட்ட குழுக்களின் செயல்பாட்டை அதிகரிக்க செய்ய வேண்டும். அதற்கு முன்பாக இருநாடுகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இது உலக அமைதிக்கும் அவசிய தேவையாகும் என்று லீ கெகியாங் மேலும் கூறினார்.  சீன பிரதமருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் லீ யின் டெல்லி வருக்கைக்கு தெரிவித்து திபெத் நாட்டவர்கள் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago