முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருண்கோபி தந்தை திடீர் மாயம்: போலீசில் புகார்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மே,23 - நடிகரும், இயக்குனருமான தருண்கோபி தந்தை பொன்னையா தேவர் (75)  திடீர் என்று மாயமானார். தருண்கோபி `மாயாண்டி குடும்பத்தார்' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். விஷால் நடித்த `திமிரு' படத்தை இயக்கியுள்ளார். இவர் தந்தை பொன்னையா தேவர் மதுரவாயலில் உள்ள வீட்டில் தங்கி இருந்தார்.

கடந்த சனிக்கிழமை காலை 11 மணிக்கு அருகில் இருந்த டீ கடைக்கு சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பக்கத்து வீடுகளில் தேடியபோது அங்கும் இல்லை.

பொன்னையா தேவரின் சொந்த ஊர் தேனி அருகில் உள்ள கம்பம் கூடலூர். 2006-ல் சென்னை வந்து தருண்கோபியுடன் தங்கி இருந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு அவர் தருண்கோபியின் தந்தை என்பது தெரியும். பொன்னையா தேவருக்கு நண்பர்கள் அதிகம் கிடையாது. அருகில் உள்ள டீ கடை மற்றும் சைக்கிள் ஸ்டாண்டுக்கு போவார். வெளியே போனால் மாலை 5 மணிக்கு திரும்பிவிடுவார்.

மூன்று நாட்களாக வீட்டுக்கு வராதது குடும்பத்தினரை வருத்தமடைய செய்துள்ளது. இதுகுறித்து தருண்கோபி சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

பின்னர் தருண்கோபி நிருபர்களிடம் கூறும்போது, என் தந்தை காணாமல் போன அன்று மாமல்லபுரத்தில் ஒரு படப்பிடிப்பில் இருந்தேன். இரவு 11 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். தந்தை அறையில் தூங்கி கொண்டு இருப்பார் என்று நினைத்தேன். மறுநாள் காலையில்தான் அவர் காணாமல் போன தகவல் தெரிந்தது.

அக்கம் பக்கத்தினர், கடைக்காரர்கள், ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள் போன்றோரிடமெல்லாம் விசாரித்தேன். யாரும் பார்க்கவில்லை என்றனர். பாண்டிச்சேரி, தேனியில் இருக்கும் சொந்தக்காரர்களிடமும் விசாரித்தேன். அங்கும் வரவில்லை என்றார்கள். போனில் நம்பர் போட்டு அவருக்கு பேசவும் தெரியாது. தந்தை காணாமல் போனதால் குடும்பத்தினர் கவலையில் இருக்கிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்