முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை மணந்த இளைஞர்

சனிக்கிழமை, 25 மே 2013      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, மே.26 - பீகார் மாநிலத்தில், பங்கா மாவட்டத்தில், 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 22 வயது பெண்ணை அவரது நண்பர்  திருமணம் செய்துகொண்டார் என்று போலீஸார் தெரிவித்தனர். இந்த அபலைப் பெண்ணின் திருமணம் கோவிலில் நடைபெற்றது.  

இந்த பெண்ணுக்கும், அவரது நண்பருக்கும், கோவிலில் நண்பர்கள், உற்றார் உறவினர்கள், பொது மக்கள், கிராமத்தினர், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் திருமணம் இனிதே நடைபெற்றது என்றும், உறவினர்களும், கிராம மக்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர் என்றும்  சமூக சேவகர் ஹிராலால் மண்டல் தெரிவித்தார். புதுமாப்பிளை ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். இதுபற்றி அவர் கூறியதாவது: எஞ்ஜினியரான  நான் அந்த அபலைப் பெண்ணை திருமணம் செய்து அவருடன் வாழ்வது என்று முடிவு  செய்து விட்டேன்.

நான் அந்த பெண்ணை எனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டுள்ளேன். சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் 3 பேரால்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதுவும் என் கண் முன்னரே இந்த கொடுமை நடந்தது என்று அவர் கூறியதாக மாவட்ட போலீஸ் அதிகாரி கூறினார். இதுபற்றி அந்த போலீஸ் அதிகாரி மேலும் கூறியதாவது:

திருமணம் நடைபெற்றபோது, அந்த பெண்ணின் தந்தையும் உடனிருந்தார். திருமணத்துக்கு முன்பாக அவர்கள் இருவரும் தங்களது திருமணத்தை பதிவு செய்து கொண்டனர் என்றும்  அந்த அதிகாரி தெரிவித்தார்.

முன்னதாக அந்த பெண்ணும், அவரது நண்பரும் ஒரு இடத்துக்குச் சென்றனர். அப்போது அவரையும், அந்த பெண்ணையும் தனியாக ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று 3 மணி நேரம் பிணைக் கைதியாக வைத்திருந்து  பின்னர் 3 பேர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவர்களிடமிருந்த பணத்தையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக மாவட்ட போலீஸ் அதிகாரி கிரேந்திர குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்