முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோஹ்லி எனக்கு மிகவும் நெருக்கம்: விண்டு தாராசிங்

சனிக்கிழமை, 25 மே 2013      சினிமா
Image Unavailable

 

மும்பை, மே. 26 - தனக்கு பல கிரிக்கெட் வீரர்களை தெரிந்திருந்தாலும் விராத் கோஹ்லி, ஹர்பஜன் சிங் மற்றும் மன்ப்ரித் கோனி ஆகியோர் தான் நெருக்கமாக இருந்ததாக ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக கைது செய்யப்பட்ட விண்டு தாராசிங் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்தது தொடர்பாக மறைந்த பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் விண்டு தாரா சிங் (49) கடந்த 3 நாட்களுக்கு முன்பு மும்பையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை விசாரிக்க விசாரிக்க பல பேரின் பெயர்கள் வெளியே வருகிறது.

விசாரணையில் தக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. குருநாத் மெய்யப்பனுக்கும் தொடர்பு உண்டு என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் விசாரணையில் கூறுகையில், தனக்கு பல கிரிக்கெட் வீரர்களைத் தெரியும் என்றாலும் அதில் விராத் கோஹ்லி, ஹர்பஜன் சிங் மற்றும் மன்ப்ரீத் கோனி ஆகியோர் தான் நெருக்கமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டிகளில் பல பாலிவுட் பிரபலங்கள் சார்பில் தான் பெட் வைத்ததாகவும், தனது நண்பர் ஆனந்த் சாக்சேனா தான் தன்னை பல ஆண்டுகளுக்கு முன்பு பெட்டிங் ராக்கெட் ஆட்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனந்த் தான் விண்டுவுக்கு ரமேஷ் வியாஸ் மற்றும் ஷோபன் மேத்தா ஆகிய தரகர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார். மன்ப்ரீத் தற்போது பஞ்சாப் அணிக்கு விளையாடி வருகிறார். அவர் 2008 ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்