முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூதாட்ட தரகர் சஞ்சய் சென்னை விமான நிலையத்தில் கைது

திங்கட்கிழமை, 27 மே 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.28 - ஐ.பி.எல். சூதாட்ட தரகர் சஞ்சய் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. வெங்கட்ராமன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கிரிக்கெட் சூதாட்ட வழக்கு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சூதாட்ட கும்பல் தலைவர் பிராசந்தின் காவல் விசாரணை இன்று (நேற்று) டன் முடிந்தது. எனவே அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இந்த வழக்கின் மற்றொரு முக்கிய குற்றவாளியான சஞ்சய் பாவனா இன்று (நேற்று) வெளிநாட்டில் இருந்து சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார். கிரிக்கெட் சூதாட்டத்தில் அவரை பற்றிய விசாரணை தொடங்க உள்ளது. அதன் பிறகு அடுத்தக்கட்ட கைது நடவடிக்கைகள் முடிவு செய்யப்படும். இதுவரை கைப்பற்றப்பட்ட செல்போன்கள், கம்ப்யூட்டர்கள், ஆவணங்கள் ஆகியவற்றை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்