முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரியாவில் கால்வாயில் பஸ் கவிழ்ந்ததில் 21 பேர் பலி

திங்கட்கிழமை, 27 மே 2013      இந்தியா
Image Unavailable

 

எட்டா, மே.28 - கால்வாயில் பஸ் கவிழ்ந்ததில் புது மணப்பெண் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். 23 பேர் பலத்த காயமடைந்தனர் என்று போலீஸார்  தெரிவித்தனர். பருகாபாத்திலிருந்து புறப்பட்டு டெல்லி நோக்கிச் சென்ற இந்த பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால்  புரியா பகுதியில் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது.

இதில் கால்வாயிலிருந்து 21 சடலங்களை உள்ளூர் மக்களும் போலீஸாரும் மீட்டனர். 23 பேர் காப்பற்றப்பட்டனர். இதில் அல்கானி என்ற இடத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு காசியாபாத் சென்ற புது மணப்பெண் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களது நிலமை சீராக உள்ளது என்றும் போலீஸார தெரிவித்தனர். இந்த பஸ்ஸை ஓட்டிச் சென்ற டிரைவர் ஏதோ ஒரு சிந்தனையில இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் இறந்த சிலரது சடலங்களைக் காணவில்லை. அதைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 

இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது பற்றிய விவரம் சரிவரத் தெரியவில்லை. இவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக எட்டா மாவட்ட  கலெக்டர் லோகேஷ் தெரிவித்தார். இந்த விபத்தில் 10 ஆண்கள், 4 பெண்கள், 7 குழந்தைகள் இறந்துள்ளனர் என்று மாவட்ட கூடுதல் எஸ்.பி. ரதாய்மோகன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்