முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற ஸ்வான் தகுதியற்றது: ராடியா

செவ்வாய்க்கிழமை, 28 மே 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, மே. 29 - ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனம் அதைப் பெற தகுதியற்றது என்று சி.பி.ஐ நீதிமன்றத்தில் அரசு தரப்பு சாட்சியாக ஆஜரான அரசியல் தரகர் நீரா ராடியா சாட்சியம் அளித்தார்.

டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. தரப்பு சாட்சியாக நீரா ராடியா சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, நீரா ராடியா கடந்த ஆண்டு டிசம்பர் 5 ம் தேதியே சாட்சியம் அளிப்பதாக இருந்தது. ஆனால் நரம்பியல் தொடர்பான அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியிருப்பதால் சாட்சியம் அளிப்பதற்கு 3 மாத கால அவகாசம் கோரியிருந்தார். இதையடுத்து சாட்சியம் அளிப்பது ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மே மாத முதல் வாரத்தில் நீதிபதி ஓ.பி. சைனியிடம் சாட்சிகளின் பட்டியலை சி.பி.ஐ. வழங்கி இருந்தது. இதன்படி, 28 ம் தேதி நீரா ராடியாவின் சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும். இதனால் நேற்று நீரா ராடியா நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர், ஸ்பெக்ட்ரம் உரிமத்தைப் பெறுவதற்கு ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு தகுதி இல்லை. அந்த நிறுவனம் அது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் ஏ.டி.ஏ.ஜி. நிறுவனத்தைச் சேர்ந்ததுதான். 

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்ட போது ஊடகங்களால் தகுதியான நிறுவனமா? இல்லையா? என்று பெரும் விவாதம் நடத்தப்பட்டது. அந்த விவாதங்கள் மூலமாகவும் டாடா குழு வழக்கறிஞர்கள் மூலமாகவும் ஸ்வான் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற தகுதியற்றது என்பதை தெரிந்து கொண்டேன். ஆனால் எனக்கு தனிப்பட்ட வகையில் உறுதிப்படுத்தும் தகவல் எதுவும் இதுகுறித்து கிடைக்கப் பெறவில்லை. 2007மம் ஆண்டு டாடா குழுமத்தின் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் டூயல் டெக்னாலஜி உரிமம் பெறுவதற்காக விண்ணபிக்குமாறு எனது நிறுவனம் அறிவுத்தல் கொடுத்தது என்றார் அவர்.

இதைத் தொடர்ந்து அவரிடம் மீண்டும் ஜூலை 2 ம் தேதி நீரா ராடியா சாட்சியம் அளிக்க இருக்கிறார். மேலும் இந்த வழக்கில் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய டேப்புகளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஸ்வான் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் கொடுப்பதற்காகத் தான் கலைஞர் டி.வி. 200 கோடி ரூபாய் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதில்தான் ஆ. ராசா, கனிமொழி, ஷரத், ஸ்வானின் ஷாகித் பல்வா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தற்போது ஸ்வான் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் உரிமம் தகுதி இல்லாததுதான் என்று அரசியல் தரகர் நீரா ராடியா கூறியிருப்பது கலைஞர் டி.வி. தரப்புக்கு மேலும் ஒரு நெருக்கடியாகவே கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago