முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் தாக்குதல் நடத்த மாவோயிஸ்டுகள் திட்டம்

புதன்கிழமை, 29 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,மே. 30 - சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்கள் மகேந்திர கர்மா, நந்தகுமார் உட்பட 28 பேர் கொல்லப்பட்டனர். இதில் மகேந்திர கர்மா கொல்லப்பட்டதை தங்களுக்கு கிடைத்த வெற்றியாக மாவோயிஸ்டுகள் கொண்டாடி வருகிறார்கள். 

மாவோயிஸ்டுகள் வனப் பகுதிகளில் நடத்திய வெற்றி விழாவில் அந்த இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பேசுகையில், விரைவில் மழைக் காலம் தொடங்கவிருப்பதால் சீக்கிரமே அடுத்த தாக்குதலுக்கு தயாராக இருக்க வேண்டும். அந்த தாக்குதல் திட்டம் பற்றி உங்களுக்கு விரைவில் தெரிவிக்கப்படும் என்றனர். எனவே இத்திட்டத்தினை உளவுத் துறையினர் ஒற்றர்கள் மூலம் அறிந்தனர். இது குறித்து மத்திய அரசுக்கு அவர்கள் தகவல் தெரிவித்து உஷார்படுத்தி உள்ளனர். இதையடுத்து மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் செல்லும் தலைவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்