முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்சல்களிடம் இனி பேச்சு இல்லை: மத்திய இணையமைச்சர்

புதன்கிழமை, 29 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மே. 30 - நக்சல்களுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்துவோம். இனிமேல் அவர்களுடன் பேச்சு நடத்தப் போவதில்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறுகையில், 

நக்சல்களின் கொடூரமான படுகொலைகள் கடந்த 6 மாதங்களாக அதிகரித்துள்ளன. நக்சல்களுக்கு எதிரான கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவர்களுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு ஜனநாயகத்திலும், பேச்சுவார்த்தையிலும் நம்பிக்கையில்லை. வன்முறையை அவர்கள் கைவிடாதவரை பேச்சு நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை. 

தீவிரவாத செயல்களால் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் பாதிக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். நக்சல்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் விஷயத்தை மறுபரிசீலனை செய்யவுள்ளோம். முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட்ட நிதியை சில மாநில அரசுகள் செலவிடாமல் அப்படியே வைத்துள்ளன. வளர்ச்சி பணிகளை நடத்தி அதன் பயன்கள் மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகைகள் குறித்து ஆராயப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago