முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி மும்பை இந்தியன்ஸ் அதிர்ச்சி தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      விளையாட்டு
Image Unavailable

ஜெய்பூர், மே. - 1 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் ஜெய்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதிர்ச்சி தோல்வி அடைய வைத்து இந்தத் தொடரில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி தரப்பில், போத்தா மற்றும் வாட்சன் இருவரும் அபாரமாக பேட்டிங் செய்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். டெய்லர் அவர்களுக்கு பக்கபலமா க ஆடினார்.
முன்னதாக பெளலிங்கின் போது, போத்தா, ஏ.சிங் மற்றும் மெனேரியா ஆகியோர் அடங்கிய கூட்டணி அபாரமாக பந்து வீசி முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றியது. தவிர, எதிரணியின் ரன் ரேட்டையு ம் கட்டுப்படுத்தியது. வார்னே அவர்களுக்கு ஆதரவாக பந்து வீசி னார்.
ஐ.பி.எல். டி - 20 போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் அரங்கத்தில் 34 -வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் கேப்டன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ரா யல்ஸ் அணியும், கேப்டன் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் முன்னதாக டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பி ல், கேப்டன் டெண்டுல்கர் மற்றும் கீப்பர் ஜேக்கப்ஸ் இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.
ஆனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணி ராஜ ஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி யது. இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 94 ரன்னில் சுருண்டது.
குறைந்த ஸ்கோரைக் கொண்ட இந்த ஆட்டத்தில் மும்பை அணி சார் பில் ஒரு வீரர் கூட கால் சதத்தை தாண்டவில்லை. ஆல்ரவுண்டர் சைம ண்ட்ஸ் அதிகபட்சமாக, 26 பந்தில் 17 ரன்னை எடுத்தார். இதில் 1 பவு ண்டரி அடக்கம். இறுதியில் அவர் போத்தா வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார்.
அடுத்தபடியாக, துவக்க வீரர் ஜேக்கப்ஸ் 15 பந்தில் 15 ரன்னை எடுத் தார். கேப்டன் டெண்டுல்கர் 7 பந்தில் 7 ரன்னை எடுத்து ஆட்டம் இழந்தார். தவிர, ராயுடு 11 ரன்னிலும், ரோகித் சர்மா 13 ரன்னிலும், ஹர்ப ஜன் சிங் 10 ரன்னிலும், பொல்லார்டு 4 ரன்னிலும் அவுட்டானார்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் போத்தா 6 ரன்னைக் கொடுத்து 3 விக் கெட் எடுத்தார். ஏ. சிங் 14 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். மெனேரியா 20 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, வார் னே 1 விக்கெட் எடுத்தார்.
ராஜஸ்தான் அணி 95 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளி ய இலக்கை மும்பை இந்தியன்ஸ் வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 18.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 95 ரன்னை எடுத்தது.
இதனால் கேப்டன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த லீக் போட்டியில் 11 பந்து மீதமிருக்கையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.
ராஜஸ்தான் அணி தரப்பில், போத்தா அதிகபட்சமாக 39 பந்தில் 45 ரன்னை எடுத்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். துவ க்க வீரர் வாட்சன் 32 பந்தில் 26 ரன்னை எடுத்தார். தவிர, டெய்லர் 13 ரன்னை எடுத்தார்.
மும்பை அணி சார்பில், முனாப் படேல் 18 ரன்னைக் கொடுத்து 2 விக் கெட் எடுத்தார். மலிங்கா 20 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட்எடுத்தா ர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக போத்தா தேர்வு செய்யப் பட்டார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்