முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் சூதாட்டத்தில் மேலும் 8 வீரர்களுக்கு தொடர்பு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜூன். 3 - ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ராஜஸ்தான் ராயல் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த் , அஜித் சண்டிலா, அங்கீத் சவான் அகிய 3 வீரர்கள் சிக்கினார்கள். இதில் ஸ்ரீசாந்தும், சண்டிலாவும் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது திகார் ஜெயலில் உள்ளனர். அங்கீத் சவான் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக கைதான சூதாட்ட தரகர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் மேலும் 8 வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக டெல்லி போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதில் 2 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இவர்கள் வெவ்வேறு அணிகளில் விளையாடுபவர்கள். கைதான சூதாட்ட தரகர்கள் சுனில் பாட்டியா, தீபக் ஆகியோர் அடிக்கடி மது, மாதுவுடன் கூடிய இரவு விருந்து நிகழ்ச்சியை வைத்து உள்ளனர். இதில் வீரர்கள் பலர் பங்கேற்று உள்ளனர். இந்த மது விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பற்றி விவரங்களை அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ராஜஸ்தான் வீரர் திரிவேதியிடம் கேட்டு அறிந்தனர். விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற 8 வீரர்களுக்கும் ஸ்பாட்பிக்சிங்கில் தொடர்பு உண்டா என்று உறுதியாக தெரியவில்லை.

இது குறித்து டெல்லி போலீஸ் உயர் அதிகாரி கூறியதாவது:-

இந்த மதுபான விருந்து நிகழ்ச்சி சண்டிகார், மும்பையில் நடந்துள்ளது. சில வீரர்கள் இந்த விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வாடிக்கையாகும். அவர்களுக்கு ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் தொடர்பு இருக்கிறதா என்பது எங்களால் உறுதி செய்ய முடியவில்லை. திரிவேதியிடம் நடத்திய விசாரணையின் போது நாங்கள் சில வீரர்களை பற்றி விவாதித்து வருகிறோம். ஆனால் இதுவரை அந்த வீரர்கள் ஸ்பாட்பிக்சிங்கில் ஈடுபட்டார்களா? என்பதற்கான ஆதாரம் எதுவும் எங்களிடம் இல்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணை முடியும் வரை எந்த ஒரு வீரருக்கும் நாங்கள் நற்சான்று தர முடியாது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்